ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று குறித்த வழக்கு விசாரணை கல்கிசை நீதிமன்றத்தின், நீதிபதி லோசன அபேவிக்கிரம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதுஅவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். Read more