சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் விசேட விளக்கமறியல் கைதிகளுக்காக, தனித்துவமான சிறைக்கூடமொன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார். விசேட விளக்கமறியல் கைதிகளின் பாதுகாப்புக் கருதி, இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்க எண்ணியுள்ளதாகவும், வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, அவர்களைப் பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பென்றும் குறிப்பிட்டுள்ளார்.