யாழ். மாநகரத்தை பசுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இதன்படி இவ் வேலைத்திட்டமானது மத்திய அரசு, வடக்கு மாகாண சபை, யாழ்.மாநகர சபை ஆகியவற்றுடன் இணைத்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அரச திணைக்களங்கள் மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்பும் இதற்கு பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read more
மத்திய அரசின் 1000 பாலம் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண சபையினால் வவுனியா மாவட்டத்திற்கு 18 பாலங்களும் வவுனியா வடக்கிற்கு 06 பாலங்களும் ஒதுக்கப்பட்டது .அதில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 04 பாலங்கள் 14.05.2018 அன்று பொது மக்களின் பாவனைக்காக வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது