யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றின் பிரதேச செய்தியாளர் மற்றும் பத்திரிகை விநியோகஸ்தர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா இராஜேந்திரன் (வயது -55) என்பவரே படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், கொழும்புத்துறை துண்டிச் சந்தியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஐந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more
கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் நிவாரணக் குழுக்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் வீதியில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் கத்தோலிக்க கன்னியர் மடம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்த மரியன்னையின் சிலை நேற்று இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.