சோமாலியாவில் நிர்கதியாக்கப்பட்ட 12 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் பிரச்சினைகளால் நிர்கதியான குறித்த இலங்கையர்களை மீட்பதற்காக, அடிஸ்அபாபியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் சர்வதேச குடியேறிகளுக்கான ஒழுங்கமைப்பு என்பவற்றின் ஊடாக, இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த 12 பேரும் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.