ரயில்வே தொழிற் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்படும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை போக்குவரத்து சபை மேலதிக சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாளாந்தம் இலங்கை போக்குவரத்து சபை வழமையாக 5,400 பஸ்களை சேவையில் ஈடுப்படுத்துகின்றது.
பணி பகிஷ்கரிப்பு காரணமாக இத்தொகையை 5,700ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார். Read more
வாக்காளர்களை பதிவு செய்யும் நடைமுறைக்கு அமைய, ஒரு வீட்டின் பிரதான குடியிருப்பாளர்கள் முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்தை கையளிக்கும்போது, அதனை பெற்றுக்கொண்டமைக்கான பற்றுச்சீட்டை, கிராம சேவகர் வழங்குவது கட்டாயம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி முதல் 20,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்தது.
2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், 2.5 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பஸ் போக்குவரத்தைத் தவிர்த்து மாற்றுப் போக்குவரத்துக்கு மாறியுள்ளதாக இலங்கைத் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.