புகையிரத தொழிற்சங்கங்கள் சில நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த பணிப் புறக்கனிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.
அதேவேளை புகையிரத தொழிற்சங்கம் மற்றும் புகையிரத அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அந்த சங்கம் கூறியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் இன்று 12.30 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபுலானந்த கல்லூரியின் கணினி அறையில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
சித்திரவதைகள் தடுப்புக்கான ஐ.நா சபையின் உப குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் நேற்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு சிவனொளிபாத மலை அடிவாரத்தில் குறிப்பிட்ட சிலரால் சிவனொலிபாத மலையின் பெயர் மாற்றம் செய்யபட்டது.
இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக முழுமையாக பெண் பணியாளர்களைக் கொண்ட விமானம் ஒன்று நேற்றையதினம் சிங்கபூருக்கு சென்றுள்ளது.
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா பொலிசாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.