சீதுவ பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து முதுவாடிய பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, வலப்பனையிலிருந்து சீதுவ நோக்கி பயணஞ்செய்த லொரியொன்றை வழிமறித்து சோதனையிட்ட போது, அதனுள்ளிருந்து 1,116 இராணுவ சீருடைகளை ஒத்த உடைகள் காணப்பட்டதாப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த உடைகளுடன் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றவருவதாகவும் தெரிவித்தனர்.