குளியாபிட்டி – ஹெட்டிபொல – பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய பிரதேசங்களுக்கும் நாளை அதிகாலை 4 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை ரஸ்நாயக்கபுர மற்றும் கொபேய்கனே ஆகிய காவல்துறை பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 4.00 மணிவரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.