புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் அம்பாறை காரைதீவு பாடசாலைப் பிள்ளைகள் ஐவருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. காரைதீவு ஆர்.கே.எம் பெண்கள் பாடசாலையின் செல்வராசா யனுசா (தரம் 8), விஜயபாகு லுக்ஷாந்தி (தரம் 8), தேவராஜா மிதுஷா (தரம் 7) மற்றும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் ரதீஸ்வரன் கிஜேந்தன் (தரம் 8) மனோகரன் சினோஜன் (தரம் 6) ஆகியோர்க்கு

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. வி.ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தை அமரர் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவாக வழங்கிய நிதியில் இவை வழங்கப்பட்டன. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான ம.சிவநேசன் (பக்தன்) அவர்கள் கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.