தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமலிருக்க தயாராகி வருவதாகவும், அவ்வாறு செயற்பட்டால் தாம் நீதிமன்றத்தை நாடத் தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்தரமுல்லை-நெலும் மாவத்தையில் அமைந்துள்ள தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார்.
கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணியாளர்கள் 08 பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா கந்தபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டுகளை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாமதமேற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.
கல்முனை- மருதமுனைப் பிரதேசத்தில் தீவிரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பெயரில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளை தங்க வைப்பதற்கு பௌத்த குருமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமையின் காரணமாக, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்தாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இலங்கை அதிபர் சங்கம் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.