Header image alt text

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

மாணவர்கள் நேற்று முதல் ஆரம்பித்துள்ள வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலேயே மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தினை அவர்கள் நடத்தியிருந்தனர். ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்து அனைத்து பல்கலைக்கழகங்களின் கற்றல் நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டது. Read more

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டுகள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. இதனால் இந்தக் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. Read more

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ம் திகதிமுதல் ஜூன் 02ம் திகதிவரை வைத்திய தேவைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி வழங்குமாறு அவரது சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார். எனவே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை தற்காலிகமாக நீக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். Read more

வவுனியா நகரசபை தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தின் செயலாளரினால் வவுனியா நகரசபை சுகாதாரப்பகுதி தொழிலாளர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் சுகாதாரப்பகுதி தொழிலாளர் ஒருவருக்கே நேற்று முன்தினம் நகரசபை பொது நூலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரும் தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தின் செயலாளருமான கோல்டன் என்பவருக்கு எதிராகவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

2019ம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத் தரா­தர சாதா­ர­ண­தர பரீட்­சைக்கு பாட­சாலை மட்­டத்­திலும் தனிப்­பட்ட ரீதி­யிலும் விண்­ணப்­பிப்­ப­தற்­கான கால எல்லை இம்­மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் சனத் பூஜித தெரி­வித்­துள்ளார்.

டிசம்பர் மாதம் இடம்­பெ­ற­வுள்ள கல்விப் பொதுத் தரா­தர சாதா­ர­ண­தர பரீட்­சைக்கு விண்­ணப்­பிக்க விரும்பும் அரச சேவை­யி­லுள்ள அலு­வ­லர்கள் தற்­போ­துள்ள முறை­மைக்­க­மை­வாக தமது விண்­ணப்ப படி­வத்­தினை கிராம அலு­வ­லர்­களால் உறு­திப்­படுத்த இய­லாத சந்­தர்ப்­பத்தில் உரிய நிறு­வனத் தலைவர் மூல­மாக சமர்­ப்பிக்­கப்­படும் விண்­ணப்­பங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். Read more

இலங்கையில் காட்சிப்படுத்தப்படும் பெயர் பதாதைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு பணிப்புரை வழங்கியிருக்கின்றார்.

இந்த மூன்று மொழிகளும் தவிர்ந்த வேறு மொழிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் பிரதமர் உத்தரவிட்டிருக்கின்றார். (அரசாங்க தகவல் திணைக்களம்)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைப் பீடமும், பிரயோக விஞ்ஞான பீடமும் வவுனியா வளாகத்தில் நடத்தப்படுகின்றன. பாடநெறிகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஆங்கில மொழியில் கற்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்தல் தொடர்பாக நேற்று அமைச்சரவையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. யாழ் பல்கலைக்கழகத்தில் வர்த்தகக் கல்வி மற்றும் வணிக விஞ்ஞானம் போன்ற பீடங்கள் வவுனியா வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. Read more

நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த உயிர்த்த ஞாயிறன்று, நாட்டில் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், 344 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவர்களில், 156 குடும்பங்களில் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 188 குடும்பங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனவும், அமைச்சரவையில் சமர்பித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை நகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில், புர்கா, நிக்காப் என்பவற்றை அணிவதற்கு, முற்றிலும் தடை விதித்து, மினுவாங்கொடை நகர சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகர சபைத் தலைவர் நீல் ஜயசேகர தலைமையில் இது தொடர்பான விசேட கூட்டம் கூடியபோதே, நகர சபைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களால் மேற்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more