பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராம எழுச்சித் திட்ட நிதியொதுக்கீட்டின் ஊடாக
யாழ். உடுவில் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 70 குடும்பங்களின் பயனாளிகளுக்கு மின்சார வசதி மற்றும் வீடுகளுக்கான மின் இணைப்பு செய்வதற்கான காசோலைகள் 06.06.2019 வியாழக்கிழமை அன்று கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் அவர்களுடன், பிரதேச செயலாளர் ஜெயகாந்த், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ர.யுகராஜ், பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். Read more
யாழ். நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில் கடந்த 06.06.2019 வியாழக்கிழமை அன்று நவீன கற்றலுக்கான திறனாய்வு வகுப்பறை (Smart Class Room) புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
இலங்கை விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்றுபிற்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
தமிழ் – முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக் கொடுப்பு மூலமே ஏற்படுமென பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளதுடன், இரு சமூகங்களுக்கும் இடையிலான சரியான புரிந்துணர்வே சிறுபான்மையினங்களின் பாதுகாப்புக்கு அடிப்படையான விடயமெனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (09) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு – மல்லாவி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலைய கட்டிடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்துள்ளார்.
தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரியான சிசிர மென்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அவர் அண்மையில் சாட்சியமளித்திருந்தார்.
சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய நான்கு பேர், ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கனகராயன்குளம் பிரதேசத்தில் அதிசொகுசு ஜீப் வாகனமொன்று இன்றுபகல் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியுமென்றால். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.