ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரபவாத ஒழிப்பு பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் மிச்செல் கொனின்ஸ்க் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்திந்துள்ளார்.
அவர் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். விசேடமாக பயங்கரவாதத்தை தடுக்கும் தேசிய மூலோபாயம் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது 824ஆவது நாளில், தமது உறவுகள் எங்கே, எனக் கேட்டு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 


அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் பலியான நான்கு பேரின் சடலங்கள் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நீர்கொழும்பு, ஏத்துகால பகுதியில் உள்ள வீடு ஒன்றை விசேட அதிரடிப்படையினர் இன்றையதினம் காலை சோதனையிட்டுள்ளனர்.
கிளிநொச்சி, தம்பகாமம், வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்றுகாலை 9மணியளவில் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டது.
தியாகி பொன். சிவகுமாரனின் 45ஆவது நினைவு நிகழ்வு 05.06.2019 புதன்கிழமை காலை 10.00மணியளவில் யாழ். உரும்பிராயில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.