Header image alt text

அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்கள் அணிய வேண்டிய ஆடை சம்பந்தமான புதிய சுற்றறிக்கை பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

2019.05.29 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை திருத்தம் செய்ய கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று புதிய சுற்றறிக்கை குறித்த அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. Read more

ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்ய கடந்த வாரம் புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்தது. எவ்வாறாயினும் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்த பின் வேலைநிறுத்தம் செய்யும் புகையிரத ஊழியர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும் என போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறியுள்ளார்.

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள பசன் ரத்னாயக்க இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2017ஆம் ஆண்டிலிருந்து குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராகக் கடமையாற்றிய இவர், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட அதிகாரியாவார். இதற்கு முன்னர் மத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், மத்திய மாகாண கலாசார அலுவல்கள் பணிப்பாளர், உடுநுவர பிரதேச செயலாளராகவும் ஹரிஸ்பத்துவ பிரதேச செயலாளராகவும் பதவி வகித்துள்ளார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட்கள், ஆயிரம் டெடனைட்டர்கள் என்பவை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானின் இரண்டாம் கட்ட தளபதியான சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட மில்ஹான் என்பவரிடம் சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணையில், Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், சாய்ந்தமருதில் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களை , பிராதான தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி இன்று வெளிப்படுத்தியுள்ளார்.

சஹ்ரானின் மனைவி இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டப் போதே, இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் இன்றைய தினம் சஹ்ரானின் மனைவியுடன் அவரது மகளும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். Read more

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தமது இலக்கு என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த பல்கலைக்கழகம் தொடர்பான விபரங்களை திரட்டுவதற்காக நேற்று இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், பல சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் இந்த பல்கலைக்கழகம்

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டங் லாய் மார்க் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

இதன்போது நடப்பு அரசியல் சூழ்நிலைகள் மற்றும் இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த 7 ஆண்டுகால வேலைத்திட்டங்கள் குறித்து பேசப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம் தமது டுவிட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறியுள்ளார். இலங்கை ரயில் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இயந்திர சாரதிகள், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள், வீதி பரிசோதகர்கள் போன்றவர்கள் மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது. Read more

கிளிநொச்சி பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற மூன்றாவது புகையிரத விபத்தில் இராணுவத்தின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த ஐந்து இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் ஏ9 வீதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி பயணித்த இராணுவத்தின் மருத்துவப் பிரிவின் ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதில் விபத்து ஏற்பட்டது. Read more

ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் காரணமான, சிறிய மற்றும் மத்தியதர தொழில்முனைவோருக்கு ஏற்பட்ட பொருளாதார நட்டம் குறித்து மதிப்பீடு செய்வதற்கான கணக்கெடுப்பொன்றை நடத்த, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத்துறைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மதிப்பீடானது, மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதென, திணைக்களம் அறிவித்துள்ளது. Read more