manus_island1பப்புவா நியுகினிக்கு சொந்தமான மானஸ் தீவில் உள்ள ஏதிலிகளை பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாம் மூடப்பட்டுள்ள போதும், 421 ஏதிலிகள் அதில் இருந்து வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களை அழைத்துச் செல்வதற்காக இன்றையதினம் 6 பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் யாரும் அங்கிருந்து வெளியேறவில்லை. இந்நிலையில் அவர்கள் எதிர்வரும் நாட்களில் பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று பப்புவா நியுகினி அரசாங்கம் எச்சரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.