பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் தற்போதைய தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் நோக்கிலே இந்த விஜயம் அமையவுள்ளது. இது தவிர, அன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும், பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும் அவர் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.