வவுனியா புதிய சின்னக்குளம் மயான சங்கத்தினருக்கு புளொட் நிதியுதவி.!(படங்கள் இணைப்பு)
வவுனியா புதிய சின்னக்குளத்தில் மரண சடங்குகளை ஒழுங்கமைத்து மேற்கொள்ளும் சங்கத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க, கழகத்தின் மறைந்த உபதலைவர் தோழர் மாணிக்கதாசன், தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் நினைவாக ஒரு தொகை உதவிப்பணம் கழகத்தின் போர்த்துகல் (கொலண்ட்) கிளையினரால் வழங்கப்பட்டது. இவ் உதவி கழகத்தின் மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் நேற்று சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டது. நிகழ்வில் உரை நிகழ்த்திய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்),
இக் கிராமத்தின் மீள் குடியமர்வில் 1990 காலப்பகுதியில் மறைந்த உப தலைவர் தோழர் மாணிக்கதாசனின் பங்கு அளப்பெரியது. அத்துடன் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் எமது கழகத்தின் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட கந்தையா சிவநேசனுக்கு வாக்களித்த கிராம மக்களுக்கு நன்றி கூறியமையும் குறிப்பிடத்தக்கது.