Header image alt text

வவுனியா‬ புதிய சின்னக்குளம் மயான சங்கத்தினருக்கு ‪புளொட்‬ நிதியுதவி.!(படங்கள் இணைப்பு)

ssவவுனியா புதிய சின்னக்குளத்தில் மரண சடங்குகளை ஒழுங்கமைத்து மேற்கொள்ளும் சங்கத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க, கழகத்தின் மறைந்த உபதலைவர் தோழர் மாணிக்கதாசன், தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் நினைவாக ஒரு தொகை உதவிப்பணம் கழகத்தின் போர்த்துகல் (கொலண்ட்) கிளையினரால் வழங்கப்பட்டது. இவ் உதவி கழகத்தின் மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் நேற்று சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டது. நிகழ்வில் உரை நிகழ்த்திய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்),

இக் கிராமத்தின் மீள் குடியமர்வில் 1990 காலப்பகுதியில் மறைந்த உப தலைவர் தோழர் மாணிக்கதாசனின் பங்கு அளப்பெரியது. அத்துடன் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் எமது கழகத்தின் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட கந்தையா சிவநேசனுக்கு வாக்களித்த கிராம மக்களுக்கு நன்றி கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

Read more

இந்தியாவைப் பார்த்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும்: இரா சம்பந்தன்

sampanthanஇலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருப்பது தற்காலத்திற்கு அவசியம் என்றும், இது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன், இலங்கை அரசை ஆதரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் அனைத்து விவகாரங்களிலும் தாம் அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று சம்பந்தர் தெரிவித்தார். Read more

மலையக வரலாற்றில் திருப்புமுனை – அமைச்சர் திகாம்பரம்

malyagamஇருநூறு வருடங்களாக தோட்ட மக்கள் என்றும் பெருந்தோட்ட மக்கள் என்றும் நிர்வாக பெயர் கொண்டு அழைக்கப்பட்ட மலையக சமூகத்தின் அவலத்தை நீக்கி லயத்து வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க புதிய கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தை அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளோம் என மலைநாட்டு புதிய கிராம, உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 
புதிய அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துகொண்ட பின்னர் தனக்கு கிடைத்திருக்கும் அமைச்சுப் பதவி குறித்து ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில் அமைச்சர் திகாம்பரம் மேலும் தெரிவித்துள்ளதாவது, Read more

கல்வியால் உயர்வதே சமூக உயர்வுக்கு ஒரே வழி-திருமதி நாகரஞ்சினி ஐங்கரன்-

P1020401யாழ்ப்பாணம் மூளாய் சுவாமி ஞானப்பிரகாசர் முன்பள்ளியின் வருடாந்த விளையாடடுப் போட்டி குறித்த முன்பள்ளி மைதானத்தில்; இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வலிமேற்கு பிரதேசசபையின் முனனாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அங்கு அவர் உரையாற்றும்போது, கடந்தகால யுத்தங்களால் நாம் பல வேதனைகளையும் பல குறிப்பிட்டுக்கூற முடியாத இழப்புக்களையும் சந்தித்து இருக்கின்றோம் இவ் இழப்புக்களின் வடுக்கள் என்றும் மாறாதவையாகவே உள்ளது. Read more

வட்டு இந்து வாலிபர் சங்கம் வாழ்வாதார உதவி-(Photoes)

l4யாழ். நவாலி வடக்கு மானிப்பாயில் வசிக்கும் சுரேன் என்பவர் வன்னி இறுதி யுத்தத்தின்போது தனது இடது கண்ணையும் இடது கையையும் இழந்துள்ளார். இவர் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினருடன் தொடர்பு கொண்டு தனது வாழ்வாதாரமான தச்சுத் தொழில் செய்வதற்கு 30,000 ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்வனவு செய்து தரும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு 30,000 ரூபா பெறுமதியான பொருட்கள் இன்று சங்க காரியாலத்தில் வைத்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப் பொருட்களை முன்னாள் சங்க உறுப்பினர் தேவராஜன் அவர்கள் வழங்கி வைத்துள்ளார். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

Read more

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள்-

ministriesதேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்றுபகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதன்படி, இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் 42 பேர் அடங்குகின்றனர். அமைச்சரவை முழு விபரம் வருமாறு,

01. ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர்
02. ஜோன் அமரதுங்க – சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்
03. காமினி ஜயவிக்ரம பெரேரா – வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர்
04. நிமல் சிறிபாலடி சில்வா – போக்குவரத்து அமைச்சர்
05. எஸ்.பி.திஸாநாயக்க – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்

Read more