Header image alt text

சேயா சதெவ்மியின் படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்-

ananthiவன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சேயா சதெவ்மியின் படுகொலையை கண்டித்து இன்று யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 12 ஆம் திகதி வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு சேயா சதெவ்மி கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் இன்றுகாலை யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சிறுமியின் அநீதிக்கு தகுந்த நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் மற்றும் குழந்தைகளுக்கான வன்முறையை எதிர்ப்போம் என்ற வாசகங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர விரிவுரைகளை புறக்கணித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. Read more

மறுக்கப்பட்ட திருவிழா நிகழ்வு, வடலியடைப்பு கிராம மக்கள் கையொப்பமிட்டு மகஜர் சமர்ப்பிப்பு-

2யாழ். வடலியடைப்பு பகுதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் இரவு நேர பூங்காவன நிகழ்வின்போது அங்கு வருகை தந்திருந்த காவல்துறையினரால் குறித்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு பல இலட்சம் ரூபாய் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாச்சார நிகழ்வுகளும் இரத்துசெய்யப்பட்டது. நிகழ்ச்சியை தொடர்ந்தால் கைதுசெய்ய நேரிடும் என்று பொலிஸார் எச்சரித்துமுள்ளனர். இதன் காரணமாக பரிசில் பெற வந்த சிறார்கள் மனவேதனை அடைந்தது மாத்திரமன்றி வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்கள் மற்றும் உள்ளுர் கலைஞர்களை நிகழ்விற்கு அழைத்து அவர்களை அவமானப்படுத்தியபோல் இது அமைந்திருந்தது. இவ்விடயம் தொடர்பில் ஆலய பிரதம குரு, விழாவின் உபயகாரர்கள், பொதுமக்கள், ஊர்ப் பிரமுகர்கள் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களைச் சந்தித்து முறையிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இவ்விடயத்தை உடன் இளவாலை காவல்நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார். அத்துடன் அக் கிராம மக்கள் ஒன்றிணைந்து தமக்கு நீதி வேண்டி கையொப்பமிட்டு பல தரப்பினருக்கு மகஜர் சமர்ப்பித்துள்ளனர்.

கடதாசி ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்-

4567676மட்டக்களப்பு, வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கப்படாமையைக் கண்டித்து இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கடதாசி ஆலையில் இருந்து பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு, கோசங்களை எழுப்பிய படியே, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரினை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபரிடம் கையளித்தனர். அவர் குறித்த மகஜரை மேலதிக நடவடிக்கைக்காக மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் கவனத்திற்கு சமர்ப்பிப்பதாக ஊழியர்களிடம் தெரிவித்தார். இதேவேளை இவ் ஊழியர்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான சம்பள கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லையென்றும் இதனால் இவ் ஊழியர்களின் குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு கூட வசதி வாய்ப்பின்றி மிகவும் கஷ்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். தங்களுக்கு தொடர்ச்சியாக சம்பளம் நிலுவை இல்லாமல் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் அல்லது சுயவிருப்பில் அல்லாது கட்டாய சுயவிருப்பில் தங்களை அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கைகள் விடுக்கின்றனர். 

சஜின் வாஸ் குணவர்தன, பிரேமலால் ஜயசேகர விளக்கமறியல்-

sachin vasspremlalமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன எதிர்வரும் ஒக்டோபர் 06ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவரை எதிர்வரும் ஒக்டோபர் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுல்ல நீதவான் தினேஷ் லக்மால் பெரேரா உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்-

oathபாராளுமன்றத்தின் மூன்று உறுப்பினர்கள், இன்று சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். ஐ.தே.கட்சி பாலித்த தேவரபெரும, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிமல் ரத்நாயக்க ஆகியோரே இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது மகனின் இழப்பு காரணமாக புதிய பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்த அன்று பாலி;த தேவரப்பெருமவால் கலந்துகொள்ள இயலவில்லை. மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான சரத் சந்திரமாயாதுன்ன இராஜினாமா செய்தார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பிமல் ரத்நாயக்க அக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் பொறுப்பேற்றார். அந்த வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டார். இவர்கள் மூவருமே இன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.