Header image alt text

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி சந்திப்பு-

prime ministerபிரதமர் ரணில் விக்ரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சீனாவுக்கான விஜயத்தை நிறைவு செய்த தென்னாபிரிக்க ஜனாதிபதி நாட்டுக்கு திரும்பும் வழியில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். சுமார் 2 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தென்னாபிரிக்க ஜனாதிபதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணை கோரி யாழில் கையெழுத்து வேட்டை-

234343434சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி யாழ். நகரப்பகுதியில் கையெழுத்து பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறை பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துகின்றோம்’ எனும் தொனிப்பொருளில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்னணியும், யாழ்.பல்கலைக்கழகத்தினரும் இணைந்து யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக நேற்றுமாலை 4மணியளவில் கையொப்பம் பெறும் செயற்பாட்டை முன்னெடுத்தனர். மத குருமார், கன்னியாஸ்திரிகள், பெற்றோர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மற்றும், ஊழியர் சங்கத்தினர், தமிழ் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டு தமது ஆதரிவினை தெரிவித்து கையொப்பமிட்டுள்ளனர்.

கிழக்கு பல்கலையில் காணாமல் பேனவர்களின் நினைவு தினம்-

4கிழக்கு பல்கலைக்கழக வளாக நலன்புரி முகாமிலிருந்து கடந்த 05.9.1990 அன்று காணாமல் போன 158 தமிழ் மக்களினதும் 25வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்றுகாலை பல்கலைகழகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. மேற்படி உறவுகளை இராணுவத்தினரே கடத்திச்சென்றதாக குற்றம் சுமத்தும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவர்களை கண்டு பிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர். நாங்கள் நினைவு கூறுவோம் எனும் தலைப்பில் எளிமையான முறையில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. தாம் வேண்டுவெதெல்லாம் புதை குழி அல்ல புன்னகை மனிதர்களையே என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரங்களும் இதன்போது விநியோகிக்கப்பட்டன. அத்துடன் காணால் போனவர்களின் நினைவாக விளக்குகளும் ஏற்றப்பட்டன. இதன்போது பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அமைச்சர்கள் கடமைகள் பொறுப்பேற்பு-

ministriesபுதிதாக சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட அமைச்சர்கள் சிலர் நேற்றைய தினமே தங்களின் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றம் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரனதுங்க ஆகியோர் தங்களின் பதவிப் பொறுப்புக்களை ஏற்றுள்ளனர். மேலும் சில அமைச்சர்கள் இன்றையதினம் தங்களின் பதவிப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

23 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு-

election.....இரண்டு உள்ளுராட்சி மன்றங்களைத் தவிர 23 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைவதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச சபைகள் தொடர்பில் நீதிமனறத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 2 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை. ஏற்கனவே பதவிக்காலம் நிறைவடைந்துள்ள உள்ளுராட்சி மன்றங்கள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. உள்ளுராட்சி மன்றங்களுக்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், அதற்கமைவாக உள்ளுராட்சி மன்றங்களின் கட்டமைப்பை மாற்றுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more

எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தருக்கு  வாழ்த்து -ஆனந்தசங்கரி

கௌரவ இரா. சம்பந்தன் பா.உ.,  எதிர்க் கட்சித் தலைவர்,

அன்புள்ள சாம்

ANANDASANGAREEநீங்கள் எதிர்க் கட்சி தலைவராக தெரிவானதற்கு எனது வாழ்த்துக்கள். இச்சந்தர்ப்பத்தில் எமது இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வை பெறுவதற்கும் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும்  பூரண ஒத்துழைப்பை கொடுப்பீர்கள் என நம்புகின்றேன். மிக்க நட்புடனும் முற்று முழுதாக மாறுபட்ட சூழ்நிலையிலும் இப்பதவியை ஏற்றுள்ளீர்கள். பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக்க உற்சாகத்துடன் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கொடுக்கும் வரவேற்புகளைப் பார்த்து எனது மனதை மாற்றி உங்களை வாழ்த்தவும் உங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கவும் தீர்மானித்தேன். Read more