Header image alt text

புதிய அமைச்சர்கள் கடமைகள் பொறுப்பேற்பு, முதலமைச்சர்கள் பதவிப்பிரமாணம்-

champikaபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளனர். பெற்றோல் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தமது அமைச்சில் இன்று கடமைகளை பொறுப்பேற்றார். இதேவேளை மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். பௌத்த சாசன மற்றும் நீதியமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஸ இன்று தமது நீதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார். தொழிலமைச்சராக நியமிக்கப்பட்ட டபிள்யூ. டி ஜே செனவிரத்ன தமது அமைச்சின் கடமைகளை, நாரேஹன்பிட்டியில் உள்ள காரியாலயத்தில் பொறுப்போற்றார். கனியவள மற்றும் கனியவாயு அமைச்சராக ஷந்திம வீரகொடி இன்று, கொழும்பு 7இல் அமைந்துள்ள அமைச்சில் தமது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். Read more

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கலைப்பதற்கு தீர்மானமில்லை-

briberyஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கலைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை வருமாறு: லஞ்ச ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழு இவ்வாரம் கலைக்கப்பட உள்ளதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இலஞ்ச ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவை அமைத்தல் அதற்கான அங்கத்தவர்களை நியமித்தல் மற்றும் நீக்குதல் என்பன 19வது அரசியல் யாப்பின்படி நடைபெறவேண்டும். அதன்படி, இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவை கலைப்பதற்கு அதிகாரம் இல்லை. எவ்வாறானபோதும் அரசியல் யாப்பு சபை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சகல ஆணைக்குழுக்களுக்கும் ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

aarpattam (2)யுத்தக் குற்ற விசாரணையின்போது இலங்கைக்கு ஆதரவு வழங்க அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சென்னையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆர்ப்பாட்டகாரர்கள், இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்க தூதரகத்தில் மனுவொன்றையும் ஒப்படைந்துள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வாஸ் குணவர்த்தன வைத்தியசாலையில் அனுமதி-

vasவர்த்தகர் முஹமட் ஷியாம் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையே இவர் சுகயீனமுற்றதாக தெரியவந்துள்ளது. பின்னர் வாஸ் குணவர்த்தன கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளுமெண்டல் துப்பாக்கிச் சூட்டுச் சந்தேகநபர்கள் கைது-

shootingகொழும்பு – புளுமெண்டல் பகுதியில் கடந்த ஜூன் 31ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சீனா வழங்கிய போர்க்கால உதவி பற்றி பொன்சேகா கருத்து-

sarath fonsekaஇலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முடிவுக்குக் கொண்டுவர, சீனா பலமான ஆதரவை வழங்கியதாக, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சீன செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “சீனாவுடன் எப்போதும் இலங்கை நெருக்கமான உறவை பேணும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அடிப்படையில், சீனாவின் ஆதரவு இல்லையென்றால், போரை எம்மால் முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியாது, எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பழமையான மற்றும் உறுதியான நண்பர்களுள் சீனாவும் ஒன்று. நாம் அந்த நாட்டுடன் வரலாற்று ரீதியான உறவுகளைக் கொண்டிருக்கிறோம். அதனை நாம் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் சீனா எமக்கு செய்ததை நாம் மறந்து விடக்கூடாது, எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்-

32454545நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி வடமாகாண பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ். மாவட்ட செயலகம் முன்பாக நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டு, தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தினார்கள். இதன்போது போராட்டக்காரர்கள், வடமாகாணத்தில் 2300ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்றவர்களாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்கள். கடந்த அரசாங்கத்தினால், முகாமைத்துவ உதவியாளர்களாக பட்டதாரிகள் உள்வாங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வடமாகாண அமைச்சுக்களின் கீழ் புதிய ஆளணி வெற்றிடங்களாக 1478 பேரின் விபரங்கள் அனுப்பப்பட்ட நிலையில், அந்த அனுமதிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

Read more

வைபர் தொழிநுட்பம் கடந்த அரசுக்கு தெரியாது-சந்திரிக்கா-

chandrikaகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு வெளித் தரப்பினரும் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியிருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். இந்திய புதுடெல்லியில் இடம்பெற்ற ஹிந்து மற்றும் பௌத்த மத மாநாட்டில் கலந்துகொண்டு, பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இதன்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்தியா செய்மதித் தொழிநுட்பத்தின் ஊடாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருடன் தொடர்புகளை பேணி வந்ததா என வினவப்பட்டது. Read more

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் கௌரவிப்பு-(படங்கள் இணைப்பு)

IMG_2682தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்றுமாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை கிளைத் தலைவர் சக்தி செல்வராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்களால் நகரசபை மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு இரா. சம்பந்தன் அவர்களுக்கான கௌரவிப்பு கூட்டம் இடம்பெற்றது. கொட்டும் மழையிலும் மக்கள் திரளாக வந்து இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்கள். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் தவிர கட்சித் தலைவர்களான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட புதிதாக தெரிவுசெய்யப்பட்ட 14 பாராளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள் தண்டாயுதபாணி, துரைரெட்ணசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
Read more

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை-(படங்கள் இணைப்பு)

st sign 05.09.2015இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மூன்றாவது நாளாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் நேற்;று முன்தினம் ஆரம்பமான இந்த கையெழுத்து வேட்டை யாழ். நல்லூர்ப் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக இரண்டாம் நாள் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தபோது, புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டுள்ளார்.

Read more

வட்டு. மத்திய கல்லூரி மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது-

v8யாழ் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் புதிய அதிபரை மாற்றுமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் அதிபரை எதிர்வரும் மூன்றுமாத காலப்பகுதியின் பின்னர் மாற்றுவதற்கு நடவடிக்கையெடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து அந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இரண்டாம் தடவையாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வகுப்பு பகிஸ்கரிப்பினை மாணவர்கள் மேற்கொண்டனர். இதனையடுத்து வார இறுதி நாட்களான வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் கல்வி அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய பாடசாலை மூடப்பட்டது.

இதன் பின்பு இன்றுகாலை 9 மணியளவில் பாடசாலை அதிபரின் கடிதமூல வேண்டுகோளின் அடிப்படையில் பிள்ளைகளின் தாய் தந்தையர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஒர் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் வடமாகாண, கல்வி அமைச்சின் செயலாளர் திரு அ.ரவீந்திரன், மாகாண கல்விப்பணிப்பாளர் திரு செ. உதயகுமார், மாகாணகல்வி உதவிச்செயலாளர் திருமதி சுகந்தி மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு செ.சந்திரராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். 

Read more

நாடுகடத்தப்பட்டவர்கள் கைது-

airportபோலி கடவுச் சீட்டை பயன்படுத்தி பல நாடுகளுக்கு செல்ல முயற்சித்த சிரியா பிரஜை உட்பட இலங்கையர்கள் ஐவர் நாடுகடத்தப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் ஐவர் உட்பட வெளிநாட்டு பிரஜையும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததன் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால்; நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மந்தாரபுரம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள், பிரான்ஸ், கீறீஸ், இத்தாலி மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கே செல்வதற்கு முயற்சித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் இருவர், பிரான்ஸ நோக்கி பயணிக்க முயற்சித்துள்ளனர். மட்டக்களப்பைச்சேர்ந்தவர் கிறிஸ் நோக்கியும் மன்னாரை சேர்ந்தவர் அபுதாபியூடாக இத்தாலி நோக்கி பயணிக்க முயற்சித்துள்ளனர். முல்லைத்தீவைச் சேர்ந்தவர் ஜேர்மனுக்கு பயணிக்க முயற்சித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சிரிய நாட்டுப் பிரஜை போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு செல்ல முயற்சித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் ஐவரையும் வெளிநாட்டு பிரஜையையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

நானும் ஜனாதிபதியும் தூக்கமற்ற இரு சாரதிகள் – பிரதமர்-

ranilஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் தூக்கமற்ற இரு சாரதிகள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மற்றையவர்களுக்கு தூக்கம் ஏற்பட்டமையால் நாம் இன்று இங்குள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று சிறிகொத்தவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது ஆண்டு விழா நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். தேசிய அரசாங்கம் என்பது நான்கு சந்திகளைக் கொண்ட அதிவேக வீதிக்கு ஒப்பானது என குறிப்பிட்ட பிரதமர், வளைவுகள் இல்லாமையால் பயணம் வேகமாகவும் நிறுத்தம் இன்றியும் செல்வதாகவும் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டால் விபத்துக்கள் இடம்பெற வாய்ப்புண்டு எனவும் குறிப்பிட்டார். இதனால் தானும் ஜனாதிபதியும் தூக்கமற்ற இரு சாரதிகள் என அவர் தெரிவித்தார். ஜனவரி 8ம் திகதி மற்றும் ஆகஸ்ட் 17ம் திகதி மக்கள் வழங்கிய ஆணையுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டின் அனைத்து மக்களின் வாழ்வையும் சிறப்புற செய்ய வேண்டிய பொறுப்பை தாமும் ஜனாதிபதியும் ஏற்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை நிறைவேற்றிய பின் நாட்டை உங்களிடம் ஒப்படைப்போம் என இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட்டு இந்து வாலிபர் சங்கம் நிதியுதவி-

m5துணவியைச் சேர்ந்த க.புஸ்பமலர் என்ற பெண்ணுக்கு சங்கானை சுகாதார பணிமனையின் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் பிரசவத்திற்கு எந்தவிதமான வசதிகளும், உதவிகளும் இல்லாத நிலையில், பிரசவத்திற்கு தேவையான 5000 ரூபா பெறுமதியான பொருட்கள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் 04.09.2015அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. (வட்டு இந்து வாலிபர் சங்கம்)