 சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது 18வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிலத்தையும், புலத்தையும்  இணைத்துக் கொண்டாடி மகிழும்……
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது 18வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிலத்தையும், புலத்தையும்  இணைத்துக் கொண்டாடி மகிழும்……Posted by plotenewseditor on 28 September 2015
						Posted in செய்திகள் 						  
 சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது 18வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிலத்தையும், புலத்தையும்  இணைத்துக் கொண்டாடி மகிழும்……
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது 18வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிலத்தையும், புலத்தையும்  இணைத்துக் கொண்டாடி மகிழும்……Posted by plotenewseditor on 27 September 2015
						Posted in செய்திகள் 						  
சர்வதேச விசாரணையை கோருவதற்கு இலங்கை அரசுகளே காரணம்-
 யாரையும் பழிவாங்கும் எண்ணம் எமக்கில்லை. பழி வாங்குவதனால் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை. உண்மைகள் வெளியில் கொண்டுவரப்படவேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். இந்த நாட்டில் யுத்தம் ஏன் ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டு அதற்கான நியாயம் கிடைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், கடந்தகால இலங்கை அரசுகளின் போலித்தனமான செயற்பாடுகளினால் தான் சர்வதேச விசாரணையொன்றை கோரி நிற்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
யாரையும் பழிவாங்கும் எண்ணம் எமக்கில்லை. பழி வாங்குவதனால் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை. உண்மைகள் வெளியில் கொண்டுவரப்படவேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். இந்த நாட்டில் யுத்தம் ஏன் ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டு அதற்கான நியாயம் கிடைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், கடந்தகால இலங்கை அரசுகளின் போலித்தனமான செயற்பாடுகளினால் தான் சர்வதேச விசாரணையொன்றை கோரி நிற்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவருடனான நேர்காணல் வருமாறு,
கேள்வி- கடந்த ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் நல்லாட்சி யுகம் ஆரம்பித்திருக்கிறது என்று ஜனாதிபதியும் பிரதமரும் கூறிவருகிறார்கள். இந்த நல்லாட்சி தமிழ் மக்களுக்கு எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என நீங்கள் கருதுகிறீர்கள்? Read more
Posted by plotenewseditor on 27 September 2015
						Posted in செய்திகள் 						  
இலங்கை குறித்த அமெரிக்காவின் பிரேணைக்கு ஆஸி ஒத்துழைப்பு-
 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இணை பங்களிப்பை வழங்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள குறித்த யோசனைக்கு தமது அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஸோப் தெரிவித்துள்ளார். கடந்த 24ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் குறித்த யோசனை அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த யோசனைக்கு இலங்கை அரசாங்கம் தமது பங்களிப்பை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கூறியிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இணை பங்களிப்பை வழங்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள குறித்த யோசனைக்கு தமது அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஸோப் தெரிவித்துள்ளார். கடந்த 24ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் குறித்த யோசனை அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த யோசனைக்கு இலங்கை அரசாங்கம் தமது பங்களிப்பை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கூறியிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை-
 நாட்டில் நிலவும் அதிக மழையின் காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார். குறித்த மாவட்டங்களில் மலைமேடு மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் அதிக மழையின் காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார். குறித்த மாவட்டங்களில் மலைமேடு மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார கூறியுள்ளார்.
இன்று உலக சுற்றுலா தினம்-
 இன்று உலக சுற்றுலா தினமாகும். பில்லியன் சுற்றுலாப் பயணிகளுக்கு பில்லியன் கணக்கான சந்தர்ப்பம் என்பதே இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாகும். கடந்த வருடத்தில் மாத்திரம் உலகம் முழுவதிலும் 1.3 பில்லியன் மக்கள் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 1.5 டிரிலியன் ஷரூபான சுற்றுலாத்துறையில் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் சுற்றுலாத்துறையில் 3.4 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் சுற்றுலாத்துறையை விஸ்தரிப்பதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று உலக சுற்றுலா தினமாகும். பில்லியன் சுற்றுலாப் பயணிகளுக்கு பில்லியன் கணக்கான சந்தர்ப்பம் என்பதே இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாகும். கடந்த வருடத்தில் மாத்திரம் உலகம் முழுவதிலும் 1.3 பில்லியன் மக்கள் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 1.5 டிரிலியன் ஷரூபான சுற்றுலாத்துறையில் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் சுற்றுலாத்துறையில் 3.4 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் சுற்றுலாத்துறையை விஸ்தரிப்பதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சிறுவன் கொலைச் சந்தேகநபருக்கு விளக்கமறியல்-
 கொழும்பு புறநகர் அத்துருகிரிய – பனாகொட பகுதியில் 10வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹேமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவேளை சந்கேநபரை எதிர்வரும் 7ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 50வயதான இவர் கடுவலை – கொத்தலாவல பகுதியைச் சேர்ந்தவர். பியகமவில் நேற்று சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார். சிறுவனின் தந்தையுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் தந்தையைப் பழிவாங்கும் நோக்கமே கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் கூறுகின்றது. மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆயுதத்தை காட்டுவதற்காக சந்தேகநபர் பணிபுரிந்த தொழிற்சாலைக்கு அவரை அழைத்துச்சென்றபோது, கீழே விழுந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு புறநகர் அத்துருகிரிய – பனாகொட பகுதியில் 10வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹேமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவேளை சந்கேநபரை எதிர்வரும் 7ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 50வயதான இவர் கடுவலை – கொத்தலாவல பகுதியைச் சேர்ந்தவர். பியகமவில் நேற்று சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார். சிறுவனின் தந்தையுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் தந்தையைப் பழிவாங்கும் நோக்கமே கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் கூறுகின்றது. மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆயுதத்தை காட்டுவதற்காக சந்தேகநபர் பணிபுரிந்த தொழிற்சாலைக்கு அவரை அழைத்துச்சென்றபோது, கீழே விழுந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் வங்கியில் கொள்ளை-
 கொழும்பு 2 தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிலொன்றில் வந்தவர்களால் வங்கியில் கொள்ளையிடப்பட்டுள்ளது. வங்கியின் பாதுகாவலர் மீது தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர் கொள்ளையர்கள் 55 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் இன்றுகாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு 2 தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிலொன்றில் வந்தவர்களால் வங்கியில் கொள்ளையிடப்பட்டுள்ளது. வங்கியின் பாதுகாவலர் மீது தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர் கொள்ளையர்கள் 55 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் இன்றுகாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
100 வருடத்திற்கு மேற்பட்ட பழைமையான பீரங்கி மீட்பு-
 100 வருடத்திற்கு மேற்பட்ட பழமையான பீரங்கி ஒன்று காலி முகத்திடல் பகுதியில் நேற்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹோட்டல் ஒன்றின் கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்டுவதற்கு முற்பட்ட போதே 26 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட குறித்த பீரங்கி மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
100 வருடத்திற்கு மேற்பட்ட பழமையான பீரங்கி ஒன்று காலி முகத்திடல் பகுதியில் நேற்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹோட்டல் ஒன்றின் கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்டுவதற்கு முற்பட்ட போதே 26 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட குறித்த பீரங்கி மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Posted by plotenewseditor on 26 September 2015
						Posted in செய்திகள் 						  
தண்டுவான் பகுதியில் வரவேற்பு நிகழ்வும் கலந்துரையாடலும்-(படங்கள் இணைப்பு)
 முல்லைத்தீவு தண்டுவான் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர் ஆகியோரை பிரதேச மக்கள் வரவேற்கும் நிகழ்வும் கலந்துரையாடலும் இன்றுபிற்பகல் 3 மணியளவில் தண்டுவான் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் கலந்துரையாடல் ஆரம்பமானது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், ஜி.ரி லிங்கநாதன், ரவிகரன் ஆகியோரும், பாடசாலையின் அதிபர் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கிராம மக்கள் தங்களுடைய பிரச்சினைகள், அத்தியாவசிய தேவைகள் என்பன தொடர்பில் விரிவாக தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள், கல்வி செயற்பாடுகள் என்பன தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.  Read more
முல்லைத்தீவு தண்டுவான் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர் ஆகியோரை பிரதேச மக்கள் வரவேற்கும் நிகழ்வும் கலந்துரையாடலும் இன்றுபிற்பகல் 3 மணியளவில் தண்டுவான் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் கலந்துரையாடல் ஆரம்பமானது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், ஜி.ரி லிங்கநாதன், ரவிகரன் ஆகியோரும், பாடசாலையின் அதிபர் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கிராம மக்கள் தங்களுடைய பிரச்சினைகள், அத்தியாவசிய தேவைகள் என்பன தொடர்பில் விரிவாக தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள், கல்வி செயற்பாடுகள் என்பன தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.  Read more
Posted by plotenewseditor on 26 September 2015
						Posted in செய்திகள் 						  
விழிநீர் அஞ்சலிகள் – அமரர் சின்னத்தம்பி நாகமுத்து அவர்கள்
 யாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வசிப்பிடமாகவும், திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகமுத்து அவர்கள் நேற்று 25.09.2015 வெள்ளிக்கிழமை காலை இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
யாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வசிப்பிடமாகவும், திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகமுத்து அவர்கள் நேற்று 25.09.2015 வெள்ளிக்கிழமை காலை இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அன்னார் எமது கழகத்தின் மூத்த உறுப்பினரான விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு தியாகங்களைச் செய்த, தான் கொண்ட கொள்கைக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்த தோழர் பாரூக் (சி.கணேசலிங்கம்) அவர்களின் அன்புத் தாயாராவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
குறிப்பு: அன்னாரின் பூதவுடல் 179ஃ10, மூன்றாம் ஒழுங்கை திருநாவற்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (27.09.2015) முற்பகல் 11மணியளவில் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக் கிரியைகள் நடைபெறவுள்ளன. 
தொடர்புகட்கு: 0771654136, 0775155393 (குடும்பத்தினர்)
Posted by plotenewseditor on 26 September 2015
						Posted in செய்திகள் 						  
ஜனாதிபதி மைத்திரிபால இந்தியப் பிரமருடன் சந்திப்பு-
 அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேசியுள்ளார். அப்போது, இரு தலைவர்களும் இந்தியா – இலங்கை இடையிலான உறவு குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் 70வது கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பூடான், சைப்ரஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை இன்று காலை பிரதமர் மோடி சந்தித்துப் பேசியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு இனிமையானதாக இருந்தது என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வஷரூப் கூறுகையில், இலங்கையில் மறுசீரமைப்பு பணிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைய கூட்டம் குறித்து எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேசியுள்ளார். அப்போது, இரு தலைவர்களும் இந்தியா – இலங்கை இடையிலான உறவு குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் 70வது கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பூடான், சைப்ரஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை இன்று காலை பிரதமர் மோடி சந்தித்துப் பேசியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு இனிமையானதாக இருந்தது என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வஷரூப் கூறுகையில், இலங்கையில் மறுசீரமைப்பு பணிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைய கூட்டம் குறித்து எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முடிவுக்கு பிரித்தானியா வரவேற்பு-
 ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட யோசனைக்கு இலங்கை இணக்கம் வெளியிட்டமை குறித்து பிரித்தானியா தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது. இது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை என, பிரித்தானியாவின் பிரதி வெளியுறவு மற்றும் பொதுநலவாயத்துறை அமைச்சர் ஹ_கோ ஸ்வைரி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணைக்கு தமது இணக்கத்தை வெளியிடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன்கெரி நேற்று வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட யோசனைக்கு இலங்கை இணக்கம் வெளியிட்டமை குறித்து பிரித்தானியா தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது. இது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை என, பிரித்தானியாவின் பிரதி வெளியுறவு மற்றும் பொதுநலவாயத்துறை அமைச்சர் ஹ_கோ ஸ்வைரி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணைக்கு தமது இணக்கத்தை வெளியிடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன்கெரி நேற்று வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
Posted by plotenewseditor on 26 September 2015
						Posted in செய்திகள் 						  
யாழில் 6 மாதங்களில் 27 சிறுவர் துஷ்பிரயோகங்கள்-
 யாழ்ப்பாணத்தில் 27 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம் மாவட்ட சிறுவர் அலுவலக மேம்பாட்டு அதிகாரி வி.கௌதமன் தெரிவித்துள்ளார். இன்றுகாலை இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யாழ் மாவட்டத்திலே கடந்த 06 மாதங்களில் 27 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலகத்திற்கு பொறுப்பாகவுள்ள அலுவலகர்களிடம் இருந்து தரவுகள் கிடைத்துள்ளன. கடந்த 03 வருடங்களில் 167 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன. அந்தவகையில் 2013 ஆம் ஆண்டு 71 துஷ்பிரயோகங்களும் 2014ம் ஆண்டு 69 துஷ்பிரயோக சம்பவங்களும் 2015 ஆம் ஆண்டு ஜூன்மாதம் வரை 27 துஷ்பிரயோக சம்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தில் இளம் வயது திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பம் என்பன தொடர்பில் கடந்த 2013ம் ஆண்டு 104 சம்பவங்களும், 2014ம் ஆண்டு 83 சம்பவங்களும், 2015ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 29 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் யாழ் மாவட்டத்திலே கடந்த 2009ம் ஆண்டு ஆயிரத்து 17 சிறுவர்களும் 2014ம் ஆண்டு ஆயிரத்து 71 சிறுவர்களும் 2015ம் ஆண்டு ஐனவரி மாதம் வரை ஆயிரத்து 156 சிறுவர்களும் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
யாழ்ப்பாணத்தில் 27 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம் மாவட்ட சிறுவர் அலுவலக மேம்பாட்டு அதிகாரி வி.கௌதமன் தெரிவித்துள்ளார். இன்றுகாலை இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யாழ் மாவட்டத்திலே கடந்த 06 மாதங்களில் 27 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலகத்திற்கு பொறுப்பாகவுள்ள அலுவலகர்களிடம் இருந்து தரவுகள் கிடைத்துள்ளன. கடந்த 03 வருடங்களில் 167 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன. அந்தவகையில் 2013 ஆம் ஆண்டு 71 துஷ்பிரயோகங்களும் 2014ம் ஆண்டு 69 துஷ்பிரயோக சம்பவங்களும் 2015 ஆம் ஆண்டு ஜூன்மாதம் வரை 27 துஷ்பிரயோக சம்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தில் இளம் வயது திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பம் என்பன தொடர்பில் கடந்த 2013ம் ஆண்டு 104 சம்பவங்களும், 2014ம் ஆண்டு 83 சம்பவங்களும், 2015ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 29 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் யாழ் மாவட்டத்திலே கடந்த 2009ம் ஆண்டு ஆயிரத்து 17 சிறுவர்களும் 2014ம் ஆண்டு ஆயிரத்து 71 சிறுவர்களும் 2015ம் ஆண்டு ஐனவரி மாதம் வரை ஆயிரத்து 156 சிறுவர்களும் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு-
 நுவரெலியா, கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட கொத்மலை – ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற பாரிய மண்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் இருந்து பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்களால் நேற்று இரவு வரை 6 சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்றுகாலை இரண்டு வயதுடைய சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த லோகநாயகி (48 வயது), காந்திமதி (23 வயது), புவனா (6 வயது), லட்சுமி (67 வயது), சுபானி (9 வயது), மனோஜ் (4 வயது), ஷரூபினி (2 வயது) ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர். மேலும் இரு கால்களும் உடைந்த நிலையில் செல்லையா கணேசன் (வயது 55) என்பவர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது. இவ் அனர்த்தத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read more
நுவரெலியா, கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட கொத்மலை – ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற பாரிய மண்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் இருந்து பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்களால் நேற்று இரவு வரை 6 சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்றுகாலை இரண்டு வயதுடைய சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த லோகநாயகி (48 வயது), காந்திமதி (23 வயது), புவனா (6 வயது), லட்சுமி (67 வயது), சுபானி (9 வயது), மனோஜ் (4 வயது), ஷரூபினி (2 வயது) ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர். மேலும் இரு கால்களும் உடைந்த நிலையில் செல்லையா கணேசன் (வயது 55) என்பவர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது. இவ் அனர்த்தத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 26 September 2015
						Posted in செய்திகள் 						  
வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக அன்பு இல்லத்திற்கு உதவி-(படங்கள்)
 முத்துஐயன்கட்டு அன்பு சிறுவர் இல்லத்தினர் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் பிள்ளைகளுக்கான நுளம்பு வலை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பை என்பவற்றினை தந்துதவுமாறு கேட்டிருந்தனர் இதற்கமைவாக நேற்று முன்தினம்  (23.09.2015) சுமார் 16500 ரூபா பெறுமதியான 33 புத்தக பைகளும் 13500 ரூபா பெறுமதியான 30 நுளம்பு வலைகளும் அன்பு இல்ல நிர்வாகத்தினரிடம் அன்பு இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அனுசரணையினை எமது வட்டுக்கோட்டை உறவான லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் தனாக முன் வந்து வழங்கியுள்ளார். (தகவல் – வட்டு. இந்து வாலிபர் சங்கம்)
முத்துஐயன்கட்டு அன்பு சிறுவர் இல்லத்தினர் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் பிள்ளைகளுக்கான நுளம்பு வலை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பை என்பவற்றினை தந்துதவுமாறு கேட்டிருந்தனர் இதற்கமைவாக நேற்று முன்தினம்  (23.09.2015) சுமார் 16500 ரூபா பெறுமதியான 33 புத்தக பைகளும் 13500 ரூபா பெறுமதியான 30 நுளம்பு வலைகளும் அன்பு இல்ல நிர்வாகத்தினரிடம் அன்பு இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அனுசரணையினை எமது வட்டுக்கோட்டை உறவான லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் தனாக முன் வந்து வழங்கியுள்ளார். (தகவல் – வட்டு. இந்து வாலிபர் சங்கம்)
Posted by plotenewseditor on 25 September 2015
						Posted in செய்திகள் 						  
அனுமதிப் பத்திரமற்ற யாழ் கொழும்பு சேவைக்கான பஸ்களுக்கெதிராக வழக்கு-
 யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி அனுமதிப்பத்திரம் இன்றி பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 90 பஸ்கள்மீது இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பொலிஸ் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் தெரிவித்துள்ளார். அனுமதி பத்திரம் இன்றி பயணிக்கு பஸ்களுக்கு தற்போது விதிக்கப்படும் 1000 ரூபா அபராதம் போதுமானது அல்லவென தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் அபராத தொகையை ஒரு இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை திருத்தியமைப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பஸ் தரிப்பிடத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிடச் சென்றபோதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.  Read more
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி அனுமதிப்பத்திரம் இன்றி பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 90 பஸ்கள்மீது இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பொலிஸ் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் தெரிவித்துள்ளார். அனுமதி பத்திரம் இன்றி பயணிக்கு பஸ்களுக்கு தற்போது விதிக்கப்படும் 1000 ரூபா அபராதம் போதுமானது அல்லவென தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் அபராத தொகையை ஒரு இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை திருத்தியமைப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பஸ் தரிப்பிடத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிடச் சென்றபோதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.  Read more