Header image alt text

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றில் விசாரணை-வீ.ஆனந்தசங்கரி-

ANANDASANGAREEயுத்தக் குற்றங்கள் கலப்பு நீதிமன்றத்திலும் உள்ளக பொறிமுறையின் கீழ் பகுதி பகுதியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற விசாரணை முறைமை மற்றும் அமெரிக்காவின் உள்ளக விசாரணை முறைமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உள்ள கடும் விளைவுகளைப் பற்றி உணராமல் முன்வைக்கபடுகின்ற கருத்துக்களால் பொதுவான நிலைப்பாட்டினை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி சர்வதேச கலப்பு நீதிமன்ற விசாரணையை ஏற்றுக்கொண்டாலும், ஒருசில குற்றங்களை அந்த நீதிமன்றத்தில் விசாரிப்பது கடினம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கலப்பு நீதிமன்றத்திற்கு பதிலாக நம்பகத்தன்மையான பொறிமுறை-அமெரிக்கா-

unஇலங்கை தொடர்பில் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்ட மனித உரிமை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றத்திற்கு பதிலாக நம்பகத்தன்மையுடனான பொறுப்புகூறல் பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அமெரிக்கா இன்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க தீர்மானம் தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள பிரதியிலுள்ள விடயங்கள் குறித்து அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. ஹைபிரிட் எனப்படும் கலப்பு நீதிமன்றம் என்ற சொற்பதம் மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளதால் அது மாற்றமடைவதே சிறந்தது என இந்த உத்தியோகபற்றற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற அமெரிக்க தூதுவர் கித் ஹாபர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை சார்பில் ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத்த ஆரியசிங்க இன்று கருத்துக்களை முன்வைத்திருந்தார். கடந்த 14ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரையின் சுருக்கமாகவே அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன. Read more

மொறட்டுவ பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தினரின் தமிழருவி -2015 நிகழ்வு

tamil aruvi 00இன்று கொழும்பு ராமகிருஷ்ண மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பல்கலைகழக மாணவர்களின் கலை நிகழ்சிகளும் கலை, தமிழ் வளர்த்த ஈழ பெரியார்களை கவரவிப்புகளும் போட்டி நிகழ்வுகளுக்கான பரிசில் வழங்குதல்களும் இடம் பெற்றன. இன்றைய நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக மேல் மாகாண சபை ஆளுநர் க.லோகேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளர் மு.குலேந்திரனும் கலந்து கொண்டார்கள். நடனம், இசைக்கச்சேரி, சிறப்பு மக்கள் மன்றம், மலர் வெளியீடு, நாட்டிய நாடகம், கவியரங்கம், வில்லுப்பாட்டு உட்பட பல நிகழ்வுகள் மிகவும் நேர்த்தியாக இடம்பெற்றன.PHOTS⇒ Read more

முன்பள்ளி சிறார்கட்கு பா.உ. சித்தார்த்தன் பரிசில்கள் வழங்கி வைப்பு

Muzhai03அண்மையில் மூளாய் மனித வள சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தால் நடாத்தப்பட்டு வரும் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விளையாட்டு விழா குறித்த முன்பள்ளியில் இடம் பெற்றது. இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்துக் கொண்ட யாழ் -கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம்.சித்தார்த்தன் அங்கு கல்வி கற்கும் மாணவர்கட்கான புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு.ச.சசிதரன், குறித்த சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினர், முன்பள்ளி அமைப்பின் நிர்வாகத்தினர், மற்றும் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.PHOTOS⇒ Read more

துணைவி பாடசாலை மணவர்கட்கு காலணிகள் வழங்கப்பட்டது.

Thunaivi05வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் பிரான்ஸ் நாட்டில் இருந்து இயங்கும் வு.சு.வு தழிழ் வானொலின் ஊடான புலம் பெயர் உறவுகளின் உதவியுடன் நடாத்தப்படும் ‘தாயக உறவுகளைத் தலை நிமிரச் செய்வோம்’
என்ற செயல் திட்டத்தின் கீழ் சுவிஸ் நாடடில் இருந்து திருமதி சந்திரமாலா அவர்கள் வழங்கிய உதவியின் பிரகாரம் வட்டுக்கோட்iடைப் பகுதியில் இயங்கிவரும் துணைவி அ.மி.த.க பாடசாலையில் உள்ள 30 பாடசாலை மாணவர்கட்கு பாடசாலைச் சப்பாத்துகள் வாங்கி வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.PHOTOS⇒ Read more

துரித மறுசீரமைப்புக்காக அரசாங்கத்திடம் ஜேவிபி 20 அம்ச கோரிக்கை முன்வைப்பு

jVPஇலங்கையின் துரித மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகள் என்ற தலைப்பில் மக்கள் விடுதலை முன்னணி, தேசிய அரசாங்கத்திடம் பிரதான 20 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்ட அந்த முன்மொழிவுகளின் முழு வடிவம். Read more

18 மாதங்களுக்குள் சில விவகாரங்கள் குறித்து உள்நாட்டு விசாரணை – மங்கள சமரவீர

mangala_samaraweeraஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக தாக்கல்செய்யப்பட்டுள்ள அறிக்கையின் சில விஷயங்கள் தொடர்பான உள் நாட்டு விசாரணைகளை 18 மாதங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்போவதாகவும்
ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறுபான்மையினருக்கு அரசியல் தீர்வை அளிப்பது அவசியம் எனவும்
கொழும்பு நகரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகாரத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் ஒபாமா

barack-obama_0அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு, 2009ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டாலும், அவர் மீதான எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றவில்லை என்று நோபல் பரிசு வழங்கும் குழுவின் முன்னாள் செயலர் தெரிவித்துள்ளார்.
ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கியது குறித்து விமர்சனங்கள் எழுந்தன
ஒபாமாவுக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம் அவருக்கு ஒரு ஏற்றம் கிடைக்கும் என தமது குழுவினர் நம்பினர் என்று, அக்குழுவின் முன்னாள் செயலர் கெயிர் லுண்டெஸ்டாட் தமது நினைவலைகளில் கூறியுள்ளார்.
அவருக்கு விருது வழங்கப்பட்டது அமெரிக்காவில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது என்றும், அந்த விருதுக்கு அவர் தகுதியானவர் அல்ல எனப் பலர் வாதிட்டனர் என்றும் லுண்டெஸ்டாட் தெரிவித்துள்ளார்.
‘ஒபாமாவுக்கே ஆச்சரியம்’ Read more

ஆப்கானிஸ்தானில் கிழக்கே ஐஎஸ் குழுவினர் பள்ளிக்கூடங்களை மூடியுள்ளனர்

afghan_isisஆப்கானிஸ்தானில் ஐஎஸ் அமைப்பினர் இஸ்லாமிய அரசு என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் குழுவினர் ஆப்கானிஸ்தானின் கிழக்கே 30 பள்ளிக்கூடங்களை மூடிவிட்டனர் என்று ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகம் கூறுகிறது.
நங்கர்ஹார் என்ற இந்த பாதிக்கப்பட்ட மாகாணத்தில் கல்வி அமைச்சகத்துக்காகப் பேசவல்ல ஒருவர், இந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை 57ஆக இருக்கும் என்று கூறினார். Read more

ஈழத் தமிழ் மக்களுக்கு நேற்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்ற நாள் வடக்கு மாகாண முதலமைச்சர்.

tamilnaduvikiதமிழ்நாடு சட்டமன்றத்தில் இலங்கை போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையும் மகிழ்ச்சி தருகிறது என்றார்.

நேற்றைய தினம் எங்களுக்கு ஒரு முக்கியமான நாள் என்று கூறியுள்ள அவர் நாம் இதுவரை காலமும் எங்கள் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு ஒரு பதில் கிடைப்பதைபோல அமைந்த நாள் என்று தெரிவித்தார். Read more