swordயாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் நேற்றிரவு சகோதரர் இருவர் உட்பட மூவர்மீது கும்பலொன்று மேற்கொண்ட வாள்வெட்டில், மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலில் இராசாவின் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சகோதரர் இருவர் உட்பட மூவரும் படுகாயமடைந்துள்ளார். ஸ்ரான்லி வீதியில் உள்ள கடையொன்றின் முன்பாக நின்று உரையாடிக்கொண்டிருந்த சமயம் மூன்று மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த குழு இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இது பற்றிய மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.