sssநுவரெலியா தலவாக்கலையிலிருந்து டயகம நோக்கிச் சென்ற தனியார் பஸ், வாழைமலை பகுதியிலுள்ள மண்மேடொன்றில் மோதி விபத்துக்குள்ளானத்தில் அதில் பயணித்த மாணவர்கள் உட்பட 71 பேர் படுகாயமடைந்த நிலையில் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்தாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ்ஸில் பயணித்த 66 மாணவர்கள் உள்ளிட்ட 71 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.