Header image alt text

nisangaஎவன்கார்ட் தலைவர் நிசாங்க சேனாதிபதி வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. வைத்திய சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றத்திடம் நிசாங்க சேனாதிபதி கோரிக்கை விடுத்திருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

vijayakalaஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பாதா காசிம் அல் முல்லா மற்றும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சிறுவர்கள் மற்றும் விதவைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

யுத்தத்தினால் வடக்கிலுள்ள மக்களின் சுகாதார மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து பெரும் தேவைப்பாடு ஏற்பட்டுள்ளதாக, இதன்போது அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

dhilrukshiஇலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் அண்மையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து, நேற்றையதினம் அவரது இராஜினாமா ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

thaya-ratnaikeமுன்னாள் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்க இன்று பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, இராணுவ வங்கிக் கணக்கு ஒன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபா அரச நிதி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காகவே இவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

vigneswaranவட மாகாணத்தில் 150,000 வரையிலான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளமை, வன்முறைக்கான அடித்தளத்தை இடுகின்றது என்று குற்றஞ்சாட்டியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பொதுமக்களின் நிலங்கள், வாழ்வாதாரங்கள், வர்த்தகம், வளங்கள் ஆகியவற்றைப் பறித்தெடுத்திருப்பதுடன், அங்கு வாழும் விதவைகள் மற்றும் ஏனையவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும், இராணுவத்தினர் இருந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலண்டன், கிங்ஸ்டன் மாநகர சபைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ‘இரட்டை நகர’ உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு, முதன்மை உரை ஆற்றியபோதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். Read more

courtsகொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாணவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என கடற்படைப் புலனாய்வு பிரிவின் உறுப்பினர் அளுத்கெதர உப்புல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களில் மூவர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இடம்பெற்றது. Read more

islands-boat-serviceயாழ் தீபகற்பத்தில் அமையப்பெற்றுள்ள தீவுகளுக்கிடையே பயணிகள் போக்குவரத்தினை சீரான முறையில் நடாத்தும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை கடற்படையினரின் முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிக்காட்டலிற்கமைவாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதன் அடிப்படையில் யாழ்ப்பாண தீவுகளிற்கருகாமையில் படகுதுறைகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிக்கும் பொருட்டு கடற்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. Read more

sampanthanதமிழ் தேசியக் கூட்டமைப்பானது, நீதி மற்றும் சமவுரிமையை அடிப்படையாகக் கொண்டு பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் கருமத்தில், தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்கும் என்பதை வலியுறுத்த விரும்புவதாக, அக்கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் புதிய செயலாளர் நாயகமாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும், அன்டோனியோ குட்டரஸ{க்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. Read more

thissa-athanaikeமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, அது தொடர்பிலான போலி ஆவணங்களை வெளியிட்டதாக இவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Read more

NPC (4)வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

வடமாகாண சபையை பலப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆசிய மன்றத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம், இலத்திரனியல் நூலகம், சட்டவள நிலையம் என்பன அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. Read more