housing schmeகிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் பதினையாயிரத்து 370வரையான புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களினூடாக நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

எனினும் மேலும் பதினையாயிரத்து 370 வரையான குடும்பங்கள் நிரந்தரவீடுகள் இன்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில், இதுவரை பல்வேறு திட்டங்களினூடாக இருபத்தி ஆறாயிரத்து 261 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டும் நிர்மானம் செய்யப்பட்டுக்கொண்டும் இருக்கின்றதாகவும் அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.