Header image alt text

mullaitiveமுல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரத்து 259 மாற்றுத்திறனாளிகள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் 567 பேரும் பதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 707 பேரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 311 பேரும் துணுக்காய் பிரதேச செயாளர் பிரிவில் 282 பேரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 317 பேரும் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 75 பேரும் என்று இரண்டாயிரத்து 259 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் போரினால் பாதிக்கப்பட்டு உடல் அபயங்களை இழந்தவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் குடும்ப தலைவர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

drawnயாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் நீராடச் சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கீரிமலை – மாதகல் – 5, கண் கடற்கரையில் நீராடச் சென்ற ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம் நீரில் மூழ்கி பலியானார்.

யாழ். இளவாலை பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியரான நகுலன் (வயது – 31) என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளார். இதேவேளை யாழ். கந்தரோடைப் பகுதியில் உள்ள பினாக்காய் குளத்தில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி, அலுக்கை பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சாருஜன் (வயது9) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

diplomatic-passportஇந்த வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதிக்குள், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால், 423,066 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக, புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், மத்திய கிழக்கு நாடுகளுக்கு 132,705 கடவுச்சீட்டுக்களும் மற்றைய நாடுகளுக்கான கடவுச்சீட்டுக்கள் 269,647 விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 283 புதிய இராஜதந்திர கடவுச்சீட்டுக்களும் முதல் 9 மாத காலப்பகுதிக்குள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் 54,761 கடவுச்சீட்டுக்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதேகாலப் பகுதிக்குள், 64,698 வெளிநாட்டவருக்கு, புதிய இலங்கை விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pakkiyasothiநல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கை எதிர்வரும் 2017 ஜனவரி 03ஆம் நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. அதே நாளில் இந்த அறிக்கை, இணையத்தளத்தில் பகிரங்கமாக வெளியிடப்படும் என்று, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கல ந்தாய்வுச் செயலணியின் செயலர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

தமது செயலணி பல்வேறு சமூகங்களுடன் நடத்திய நேர்காணல்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதத் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்கள், குழுநிலை விவாதங்கள், மூலம், 7500 யோசனைகளைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த யோசனைகளின் அடிப்படைகள் தமது அறிக்கையில் உள்ளப்படக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். Read more

sasassaவவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வாகனம் ஒன்றும் வவுனியாவிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற கொள்கலன் ஒன்றும் இன்று அதிகாலை 5.30 அளவில் மோதி விபத்துக்குள்ளானதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ9 பிரதான வீதி, இரட்டை பெரியகுளம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற இந்த விபத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தெஹிவளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. Read more

26-12-82004ஆம் ஆண்டில் சுனாமி அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட மக்களை நினைவுகூறும் 12ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு முள்ளியவளை (கற்பூரப்புல்வெளி) கயட்டையில் இன்று 26.12.2016 பிற்பகல் 4.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

மேற்படி சுனாமி நினைவேந்தல் நிகழ்வானது கயட்டை பிரதேசத்தில் சுனாமியில் உயிர்நீத்தவர்களை நல்லடக்கம் செய்த இடத்தில் வனியா மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நினைவஞ்சலி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், துணுக்காய் பிரதேச செயலாளர், ஐங்கரநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். Read more

img_0130வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகம் பெருமையுடன் நடாத்திய இளைஞர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்வுகளும், வெற்றிபெற்றவர்களுக்கான கௌரவிப்பும் நேற்று (25.12.2016) கழகத்தின் தலைவர் திரு க.சிம்சுபன் அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

சிறப்பு அதிதிகளாக வவுனியா பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி திரு. அஜித் சந்திரசேன, வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய இளைஞர் கழக செயலாளருமான திரு ஸ்ரீ.கேசவன், தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் திரு சு.காண்டீபன், கழகத்தின் பிரதி தலைவர் திரு வி.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவ அதிதிகளாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர்கள், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். Read more

26-12-1வட மாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினம் இன்று(26.12.2016) திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டம் செம்மலைiயில் நினைவுகூரப்பட்டது. வட மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்

பிரதம அதிதியாக வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களும், விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வைத்தியக்கலாநிதி சிவமோகன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன. Read more

jailபொலிஸ் காவலில் இருக்கும் நபர்கள் மரணமடைவது, சித்திரவதைகளுக்கு உள்ளாகுவது தொடர்பில் விசேட விசாரணைப்பிரிவொன்றை அமைக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த வருடங்களில் பொலிஸ் காவலில் இருந்த நபர்கள் மரணமடைந்த சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறியுள்ளார் அவ்வாறான சம்பவங்கள் பலவற்றை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

asassaaசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 20ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு, சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து நடைபெறும், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு. எதிர்வரும் 28.01.2017 சனிக்கிழமை மதியம் 12.30 மணிமுதல் இரவு 10.00மணிவரை சுவிஸ்லாந்தின்  “Treffpunkt Wittikofen”  upiterstr-15, 3015 Bern என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், சமூக ஆர்வலருமான. திரு. இலக்ஸ்மன் இளங்கோவன் (வட மாகாண சபை ஆளுநரின் செயலாளர்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக, புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், சமூக ஆர்வலருமான, திரு. பொன். சுந்தரலிங்கம் (சங்கீத பூசணம், இன்னிசை வேந்தர்), புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், சமூக சேவகருமான, திரு.எஸ்.கே. சண்முகலிங்கம் (முன்னாள் அதிபர் – புங்குடுதீவு சிறீகணேச மகாவித்தியாலயம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவர்) ஆகியோரும், Read more