Header image alt text

kovilமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட வாகனேரி சிறீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த மூல விக்கிரகமான சிவலிங்கம் உட்பட ஆலயத்தின் திரைச் சீலை மற்றும் ஆலயத்தின் பொருட்கள் இனந்தெரியாதோரினால் உடைக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு பூசையை முடித்தவிட்டு இன்று அதிகாலை பூசைக்காக பூசகர் கோயிலுக்கு சென்றபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதை அவதானித்துள்ளர். குறித்த விடயத்தினை ஆலயத்தின் தலைவர் உட்பட நிருவாகத்தினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, வாழைச்சேனைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஆலய நிருவாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். Read more

unஇலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவின் சில பிரிவுகள் குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி, இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,

சட்டவாளர் இல்லாத நிலையில், ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு, அனுமதிக்கும் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் குறித்து ஐ.நா கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். “நாம் பல விடயங்கள் குறித்து கரிசனைகளை எழுப்பியுள்ளோம். சட்டவாளர்கள் இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவது, அனைத்துலக சட்ட நியமங்களின் படி 48 மணிநேரமாக உள்ள ஆரம்ப தடுப்புக்காவலை 72 மணித்தியாலங்களாக அனுமதிப்பது உள்ளிட்ட விடயங்களில் புதிய வரைவு கவலை தருகிறது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

chineseகுறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சீன பிரஜைஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

நி மா சி ரென் என்ற சீனரே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பிலுள்ள முன்னணி கசினோ நிலையம் ஒன்றில் பணியாற்றியிருந்தார். முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றவே தாம் இலங்கை வந்ததாக குறிப்பிட்ட சீனர் தெரிவித்திருந்தார். எனினும், அவர் சீன சூதாட்டக்காரர்களால் நடத்தப்படும் கசினோ நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கைது செய்யப்பட்டபோது, இவரது சுற்றுலா நுழைவிசைவு காலாவதியாகியிருந்தது என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more

20161217_184240சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வும் நூல் விமர்சன அரங்கும் இன்று (17.12.2016) சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கம் வினோதன் மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் இன்றுமாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்வின் அறிமுக உரையினை இதயராசன் அவர்கள் ஆற்றியதோடு, நூல் ஆய்வுரையினை லெனின் மதிவானம் மற்றும் பேராசிரியர் சித்திரலேகா ஆகியோர் வழங்கினார்கள். ருஷ்ய ஒக்டோபர் புரட்சியும் ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கமும் என்ற நூற்றாண்டு கருத்தரங்கு உரையினை நூலாசிரியர் ந.இரவீந்திரன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து சபையோர் கருத்தாடல் இடம்பெற்றது. இதன்போது சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம் என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. Read more

sfdfddயாழ்ப்பாணம் சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு முன்னால், இன்றுபிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சுற்றுலா பயணிகள் 10பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

மாதம்பேயிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வானொன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நேருக்குநேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

ethiopiaஇலங்கைக்கான தூதரகமொன்றை அடுத்த வருடம் ஜனவரியில் எத்தியோப்பியாவில் உத்தியோகபூர்வமாக திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான எத்தியோப்பிய தூதுவரும், ஆபிரிக்க ஒன்றிய ஆணையகத்துக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான தஸநாயக்க சுமித் பிரியந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையகத் தலைவர் கொசஸானா டிலாமினி சூமாவுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இந்த தூதரகம் திறக்கபடவுள்ளது. இதன்போது ஆபிரிக்க ஒன்றிய ஆணையகத் தலைவருக்கு அழைப்பிதழ் விடுக்கப்படும் என தூதுவர் சுமித் பிரியந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, எத்தியோப்பியாவில் கடந்த நவம்பர் மாதம் குடியிறுப்பாளர்களுக்கான பணியகம் ஒன்றை இலங்கை நிறுவியுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

sfdfவடமாகாணத்தில் அண்மையில் நடந்த குழப்பகரமான சம்பவங்கள் எதிலும் புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் மூன்று பேரை சமூகத்துடன் இணைத்தல் மற்றும் புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்றவர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட கைத்தொழில் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜானக ரத்நாயக்க இதனை கூறியுள்ளார். புனர்வாழ்வு பயிற்சிகள் வெற்றிகரமான முறையில் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள் மீண்டும் எந்த வகையிலும் மோதல்களுடன் சம்பந்தப்படமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். Read more

maithri-malaysia-primeஇலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேஷிய பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார். அத்துடன் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்தும் ஜனாதிபதி மலேஷிய பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார். மேலும் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சமுக அபிவிருத்தி குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மலேஷியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியபோதே குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

dsc05565முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் வலயக்கல்வி வாரிய அங்குரார்ப்பண நிகழ்வு மாங்குளத்தில் அமைந்துள்ள துணுக்காய் வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன் மற்றும் அரியரத்தினம் ஆகியோருடன் கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்விப் பணிப்பாளர், வாரியக்குழு அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.   Read more

eஎமது ஈழ உறவான தெல்லிப்பளையைச் சேர்ந்த நர்மதன் அவர்களால் தனது தாயார் அருந்தவராஜா கௌரிதேவி அவர்களின் 31ம் நாள் நினைவு(16.12.2016) தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பெரியபரந்தனை முகவரியாகக் கொண்ட சுரேஸ்குமார் விசாலினி என்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

சுரேஸ்குமார் என்பவரினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக இவ் துவிச்சக்கரவண்டி அவரது மகளான சுரேஸ்குமார் விசாலினிக்கு அருந்தவராஜா கௌரிதேவி அவர்களின் 31ம் நாள் நினைவாக வழங்கபட்டுள்ளது. சுரேஸ்குமார் கடந்தகால யத்தத்தின்போது தனது கால் ஒன்றை இழந்துள்ளார். மேற்படி கைங்கரியத்தை செய்ய முன்வந்த நர்மதன் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் சுரேஸ்குமார் அவர்களின் குடும்பம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் அமரர் அருந்தவராசா கௌரிதேவியின் ஆத்ம சாந்தி வேண்டி இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)