ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசு பெற்றுக்கொள்ள தீர்மானித்திருக்கும் 18 மாதகால அவகாசத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கால அவகாசம் கோருவது அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கான வழிமுறையாகும். கால அவகாசம் நீடித்தால், தமிழ் மக்களின் பிரச்சினை நீர்த்துப்போன பிரச்சினையாக மாறிவிடும். எனவே அரசாங்கம் கோரும் கால அவகாசம் நீடிக்க கூடாது. Read more








