deadயாழ். கோப்பாய் கைதடி வீதிப் பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சங்கத்தானை, சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கனகரட்னம் கோணேஸ்வரன் என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். யாழ் சாவகச்சேரி சகலகலாவல்வி ஆரம்ப பாடசாலையின் ஆசிரியரான இவர், நேற்று இரவு 9 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். கோப்பாய் கைதடி வீதியில் மோட்டார் சைக்கிள் இருப்பதைக் கண்ட பொது மக்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விபத்தா அல்லது கொலையா என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.