தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இதுவரையிலான காலப்பகுதிக்குள் 253 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

பெப்ரல் அமைப்பிற்கு இதுவரையிலும் 154 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் திகதியில் இருந்து இதுவரையிலுமான காலப்பகுதியில் காவல்துறை தலைமையகத்திற்கு தேர்தல்கள் தொடர்பிலான 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் 24 சட்ட மீறல்களும் 51 தேர்தல் முறைப்பாடுகள் உள்ளடங்குகின்றன.