சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் 9ஆவது நினைவு தினம் இன்றையதினம் கொழும்பு பொரளை மயானத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர். கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அத்திடிய பிரதேசத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.