Header image alt text

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க யாழ். மாவட்டத்தில் 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், தபால் மூலம் வாக்களிக்க யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தவர்களில், 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளனர். Read more

யாழ். பருத்தித்துறையில் மாகாண மேல் நீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுக்கும் வகையில் இராணுவத்தினர் வசமுள்ள நீதிமன்றக் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியை அவரது சமாதான அறையில் நேரில் சந்தித்த யாழ் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி, புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். கட்டளைத் தளபதியுடன் யாழ்பாணம் நகரத் தளபதி பிரிகேடியர் சரத் திசாநாயக்கவும் இராணுவ சட்ட ஆலோசகரும் கலந்துகொண்டிருந்தனர். அவர்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிய மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிமன்ற காணியை விடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். Read more

மன்னார் மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில் இராணுவப் படையினரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கும் எடுக்கும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறி மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டு வட மாகாண கல்வி மற்றும் கலாச்சார அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த இடத்தில் சிற்றூண்டிச்சாலை ஒன்றை நடத்திவரும் இராணுவப் படையினர் குறித்த இடத்தில் உள்ள மரத்திற்கு கீழ் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறும் மன்னார் பிரஜைகள் சங்கம், இந்த இடத்தில் இவ்வாறான செயலை செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது, அது மடு தேவாலயத்திற்கு செய்யும் மிகப் பெரிய அவமரியாதை என குறிப்பிட்டுள்ளது. Read more

புலிகள் இயக்கத்துக்காக சுவிட்சார்லாந்தில் நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 13 பேர், அந்த நாட்டின் பிராந்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அவர்கள் சுமார் 15.3 மில்லியன் டொலர்களை புலிகள் இயக்கத்துக்காக வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் இலங்கை, ஜேர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் முன்னால் உலக தமிழர் ஒழுங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களாகவும் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. Read more

இலங்கை தொடர்பான பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

பிரித்தானிய கொன்ஸர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன குழுவின் தலைவராக செயற்படுவதுடன், அவர் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றதன் பின்னர் பொதுநலவாய நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன. Read more

மனித உரிமைகள் சார்ந்த தங்களின் பரிந்துரைகள் பல அமுலாக்கப்படவில்லை என்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் தீபிகா உடகம இதனை ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து கூறியுள்ளார்.

தங்களால் முன்வைக்கப்பட்ட 40 சதவீதமான பரிந்துரைகளை அரசாங்கம் இன்னும் அமுலாக்கவில்லை. அதற்கு இலங்கையின் சட்டத்துறை கலாசாரமே காரணமாகும். இலங்கையில் தண்டனைகள் இல்லாத பட்சத்தில், சட்ட ஒழுங்குகளை சமுகத்தில் பரவச் செய்வது சிரமம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் தாரோ கொனோ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

நேற்று இரவு 9.15 மணியளவில் ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கட்டுநாயக்க வந்தடைந்துள்ளார். அவருடன் 24 பேர் அடங்கிய தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளனர். இவர்கள் பல்வேறு முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்ளவிருப்பதாக தெரியவருகின்றது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை இரத்துச் செய்து அரசாங்கத்தின் கீழ் இலாபமற்ற 2 நிறுவனங்களாக நடாத்திச் செல்லும் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன்படி சைட்டம் நிறுவனத்தை கலைக்கும் நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. சைட்டம் மற்றும் சிறீலங்கா தகவல் தொழிநுட்ப நிறுவனங்களுக்கு(SLIIT) இடையில் இவ்வாறு கைச்சாத்து இடம்பெற்றுள்ளது. Read more

கொழும்பில் காணப்படுகின்ற சாலைப் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக நிர்மாணிக்கப்பட்ட ராஜகிரிய மேம்பாலம் எதிர்வரும் 08ம் திகதி திறந்து வைக்கப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

அந்த மேம்பால வீதியின் நிர்மாணப் பணிகள் இந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நிறைவடைய இருந்த போதிலும் 11 மாத காலத்தில் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யுமாறு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. நான்கு வாகன ஓடுபாதைகளை கொண்டுள்ள இந்த வீதி 534 மீற்றர் நீளமுடையது என்பதுடன், 150 மீற்றர் நீளமுடைய பிரவேச மார்க்கத்தையும் கொண்டுள்ளது. Read more

Government is reasonably unpopular – Sithadthan

Posted by plotenewseditor on 4 January 2018
Posted in செய்திகள் 

BY Mirudhula Thambiah

Leader of People’s Liberation Organization of Eelam (PLOTE) Dharmalingam Sithadthan said that at this juncture, there is a belief that Rajapaksa may do well at the upcoming elections. If that happens, then the whole process of finding a political solution for the national question will be disturbed or even shelved.

“Definitely no Sinhala leader will go against the will of the Sinhala people, in such a situation there will be no hope for the Tamils to go forward in the process of finding a political solution. We have seen such changes over the last 60 years. I think in the current context the government is reasonably unpopular,” he said.
Following are excerpts of the interview: Read more