நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க யாழ். மாவட்டத்தில் 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், தபால் மூலம் வாக்களிக்க யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தவர்களில், 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளனர். Read more








