கதிர்காமத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞரை இலக்குவைத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவ்விளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டம் நடத்தியோரை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்க்குண்டுப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 Read more
		    







