Header image alt text

மாணவர்களின் மொழி ஆற்றலை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் தரத்திலிருந்து ஆங்கில பாடத்தை கற்பிக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலுக்கு அமையவே இத்திட்டம் உருப்பெற்றுள்ளது. இவ்வாறு ஆரம்ப வகுப்புக்களில் ஆங்கில பாடவிதானத்தை கற்பதற்கு தேவையான பாடப் புத்தங்களை அச்சிட்டு வினியோகிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் தெரிவித்துள்ளார். Read more

தேர்தல் சட்டங்களுக்கு உட்படுத்த முடியாத வகையில் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டு வருவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தலை இலக்காகக் கொண்டு பொதுமக்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் சம்பவங்கள் மாத்தளை மாவட்டத்தின் லக்கலை மற்றும் வில்கமுவ பிரதேச செயலகங்களில் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த செயற்பாட்டுடன் தேசிய மட்ட அரசியல் பிரதிநிதி ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார். Read more

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நேபாளத்தின் இராணுவப் படையின் பிரதானி ஜெனரல் ராஜேந்த்ர ஷேத்ரிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இன்று முற்பகல், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவை, மேலும் பலப்படுத்தும் நோக்கிலேயே, ஜெனரல் ராஜேந்த்ர ஷேத்ரியின் இந்த விஜயம் அமைந்துள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில், இரு நாடுகளினதும் இராணுவத்தினரின் பங்களிப்பு, அனர்த்தங்களின் போதான படையினரின் பங்களிப்பு மற்றும் அவற்றுக்கான பயிற்சிகள் தொடர்பில், இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் எஞ்சியுள்ள பொறிமுறைகளை அமுலாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இந்த வலியுறுத்தலை இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளது. இலங்கை ஐரோப்பிய ஒன்றிய கூட்டு சபையின் 21வது கூட்டம் நேற்றையதினம் கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. Read more

இலங்கையின் சமுக பொருளாதார அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரந்ஜித்சிங் சந்து இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளும் இந்த ஆண்டு 70வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள நிலையில், அது தொடர்பில் இடம்பெற்ற கலாசார நிகழ்ச்சி ஒன்றில் வைத்து அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். Read more

நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமாக இதுவரை 241 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

168 தேர்தல் முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறல்கள் சம்பந்தமாக 73 முறைப்பாடுகளும் அதில் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பேராதனை, எம்பிலிப்பிட்டிய, நிட்டம்புவ, சேருநுவர, களுத்துறை வடக்கு, மீப்பே மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் நிலையங்களில் 07 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. Read more

யாழ். வண்ணார்பண்ணை வடமேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 3வயதுடைய நித்தியா என்ற சிறுமி உயிரிழந்ததுடன், சிறுமியின் பாட்டி படுகாயங்களுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வாள்வெட்டை மேற்கொண்ட, உயிரிழந்த சிறுமியின் சித்தப்பாவான குணரத்தினம் ஈஸ்வரன் என்பவரும் விசமருந்தி உயிரிழந்துள்ளார். Read more

ஹம்பாந்தோட்டை மாகம்புறை துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றையதினம் கைவிடப்பட்டுள்ளது. சேவையிலிருந்து பலவந்தமாக தம்மை நீக்கியதாகத் தெரிவித்து ஊழியர்கள் சிலர் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து தமக்கு சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றிருப்பதால் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக அவர்கள தெரிவித்துள்ளனர். கடந்த 09ஆம் திகதி முதல் இவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுட்டு வந்தனர்.

கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேச பாடசாலை மாணவர்கள் 11 பேர் பாடசாலைக்கு சமூகமளிக்காது மதுபானம் அருந்தி சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்பத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலே அவர்கள் கைதுசெய்யப்பட்டு மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்பத்தில் குறித்த மாணவர்களின் பெற்றோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதில் நீதவான் எஸ். சிவபால சுப்ரமணியம் உத்தரவிட்டார். Read more

இரண்டு பகை நாடுகளுக்கு இடையே சமரசம் ஏற்படும் மற்றொரு அறிகுறியாக, அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வட மற்றும் தென் கொரியாவை சேர்ந்த வீராங்கனைகள் இடம்பெறும் ஒரே பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டு அணியை உருவாக்குவதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. Read more