யாழ்ப்பாணத்தில் படையினர் வசமுள்ள 683 ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் ஆராய்ந்து வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள மேலும் 683 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more
பொத்துவில் பிரதேசத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் காணப்படும் தமது காணிகளை வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் அடையாளப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இலங்கை மின்சார சபையின், பொறியியலாளர்கள் இரண்டு வாரங்களுக்குள் தொழிற்சங்க நவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேரையும் கட்சியிலிருந்து நீக்கப்போவது இல்லையெனத் தெரிவித்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர, எந்தவொரு சூழ்நிலையிலும் கட்சியுடன் இணைந்திருப்பதற்கு அவர்கள் கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அறிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி படகு மூலம் தமிழகத்திற்கு சென்ற துருக்கி நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ராமேஸ்வரம் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்புத் துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்த, தாய்லாந்து கடற்படைக்கு சொந்தமான மூன்று இராணுவ பயிற்சி கப்பல்கள் நாளை நாட்டை விட்டு புறப்பட்டு செல்லவுள்ளன.
தமது வெளிநாட்டு கொள்கைக்கு அமைய அண்டை நாட்டுடன் சிறந்த உறவினை இந்தியா பேணி வருவதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு அமைக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைபடமானது மே மாதம் வெளியிட்டு வைக்கப்படுமென நில அளவையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 150 பேர் உயிரிழந்ததாக மீட்புக்குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.