ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய 18 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒருசில அமைச்சர்களுக்கு அவர்கள் வகித்த அமைச்சுப் பொறுப்புகளுக்கு மேலதிகமாக மற்றுமொரு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதோடு, ஒருசில புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 18 அமைச்சுப் பொறுப்புக்களைத் தவிர, ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள் அதே பதவிகளை வகிப்பார்கள் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். Read more
வழிகாட்டல் மற்றும் உளவியல் பட்டதாரிகள் தமக்கான வேலைப்வாய்ப்பினை வழங்க கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்ததாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார
காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 25 ஆவது நினைவு தினம் இன்றாகும். சர்வதேச மே தினம் கொண்டாடப்படும் இன்று போல் ஓர் தினத்திலேயே அவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டார்.
மட்டக்களப்பு, காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் குருநாகல்-வந்துராகல பகுதியில் வைத்து எரிபொருள் ஏற்றி வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 25 பயணிகள் காயமடைந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தந்தையும் விஷம் அருந்திய சம்பவம் யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.
புத்தளம் – உடப்பு கீரியன்கள்ளி பகுதியில் பாழடைந்த காணியொன்றில் இருந்து எரியுண்ட நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையினை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளமையானது மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படும் நிலைமையை உருவாக்கி உள்ளது என்றும் பெப்ரல் மற்றும் கபே அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளன.