இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மடு திருத்தலப் பகுதியில் யாத்திரிகர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர்மட்ட கலந்துரையாடல் இன்றுகாலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் இடம்பெற்றது. 
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. Read more
		    
யாழ்ப்பாணம், கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர். 
தம்மால் நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்கு வருமாறு மாணவர்களுக்கு மற்றும் பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கும் 31 ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. 
வவுனியா புகையிரத நிலையத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இலங்கையின் வெளியுறவுக் கொள்கை, மேற்கத்தேய நாடுகளிடம் இருந்து விலகிச் செல்லும் நிலையில் இருப்பதாக த சிட்டிசன் என்ற சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. 
ஜப்பானில் ஏதிலி அந்தஸ்த்து கோரும் முதல் 5 நாட்டவர்களின் பட்டியலில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இலங்கை இந்திய எல்லை காவல்படையினர் நெருங்கிய ஒத்துழைப்பும் நல்லுறவும் நிலவுவதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கனை பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடும் நடவடிக்கைக்கான அகழ்வு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. 
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். 
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பழச் செய்கை தோட்டத்தில் யானையொன்று மரணித்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.