Header image alt text

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மடு திருத்தலப் பகுதியில் யாத்திரிகர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர்மட்ட கலந்துரையாடல் இன்றுகாலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. Read more

யாழ்ப்பாணம், கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தொலைக்காட்சி இயங்காத காரணத்தால், கேபிள் டிவி இணைப்பிலில் வயரைப் பொருத்த முற்பட்டபோது, அதி உயர் அழுத்தம் மின்சாரம் தாக்கியதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். கேபிள் டிவி வயருடன் மின் விநியோக இணைப்பும் தொடர்புபட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். Read more

தம்மால் நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்கு வருமாறு மாணவர்களுக்கு மற்றும் பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கும் 31 ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இருந்து இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர்களின் மேலதிக வகுப்புகளில் கலந்துகொள்ளாத மாணவர்கள் பாடசாலைகளில் பல்வேறு வகையில் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக குறித்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

வவுனியா புகையிரத நிலையத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள புகையிரதக்கடவைக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு திருட்டதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். Read more

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை, மேற்கத்தேய நாடுகளிடம் இருந்து விலகிச் செல்லும் நிலையில் இருப்பதாக த சிட்டிசன் என்ற சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உலக அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில், இலங்கை மேற்கத்தேய நாடுகள் மற்றும் இந்தியாவுடன் இசைந்து செயற்படுவதே நன்மையானதாக இருக்கும். Read more

ஜப்பானில் ஏதிலி அந்தஸ்த்து கோரும் முதல் 5 நாட்டவர்களின் பட்டியலில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஜப்பானில் ஏதிலி அந்தஸ்த்து கோரியோரில் 70 சதவீதமானவர்கள் இலங்கை, பிலிப்பைன்ஸ், வியட்நாம், நேபாளம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். ஜப்பான் டைம்ஸ் என்ற ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. Read more

இலங்கை இந்திய எல்லை காவல்படையினர் நெருங்கிய ஒத்துழைப்பும் நல்லுறவும் நிலவுவதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சமீபத்தில் இந்திய எல்லைக்காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் விஜயம் மேற்கொண்டது இரு நாடுகளின் எல்லைக்காவல்படையினர் மத்தியிலான உறவை மேலும் நெருக்கமானதாக்குவதற்கு உதவியுள்ளது என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கனை பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடும் நடவடிக்கைக்கான அகழ்வு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் இராணுவத்தினருடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் தற்போதைய தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் நோக்கிலே இந்த விஜயம் அமையவுள்ளது. இது தவிர, அன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும், பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும் அவர் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பழச் செய்கை தோட்டத்தில் யானையொன்று மரணித்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தை தற்போது பராமரிக்கும் இராணுவத்தின் 683ஆவது படைப்பிரிவில் பணியாற்றும் குறித்த அதிகாரி, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் மரணித்த குறித்த யானை தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Read more