அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை இன்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகள் கிடைத்ததாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பாட்டாளி சம்பிக்க ரணவக்கவினால் இன்று சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பிரேரணை மீதான விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் பொலிஸ் சார்ஜன்ட் ஆக பதவி உயர்வு வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றத்துக்கு இடம்பெறும் சம்பவங்கள் குறித்து, இளம் சமுதாயத்தினர் தற்போது கொண்டிருக்கும் எண்ணங்கள் மற்றும் கருத்துகள், இந்த முறைமையை நிராகரிக்கும் வகையிலேயே உள்ளதென்றும் இதனால், எதிர்காலம் குறித்து நாம் தீர்க்கமாக சிந்திக்க வேண்டுமென, ஜனாதிபதியால்,
பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 123 பேர் வாக்களித்தனர்.
புத்தளம் நாத்தாண்டிய வலஹப்பிட்டிய பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இல.01 அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று (28.11.2018) ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கிவைத்துள்ளார். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம், இராணுவத்தினர் வசம் இருக்கும் காணிகளும், வீடுகளும் விடுவிக்கப்படும், ஆனால் அரசியல் தீர்வு விடயத்தில் எம்மால் சடுதியாக எதுவும் செய்ய முடியாது என பாராளுமன்ற நாமல் ராஜபக்ச தன்னை சந்தித்து தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் பொதுநலவாய அமைப்பின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.