பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய ரவி கதிர்காமர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பிரித்தானியாவின் பினர் நகரில் சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி சென்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 அளவில் வர்த்தக நிலையத்தினை திறப்பதற்கு வந்தபோதே இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவி கதிர்காமர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். Read more
ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்றுகாலைபதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்தின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையினால் குறித்த பிரதேசத்தில் வாழும் ஆயிரத்து 383 பேர் அன்றாடம் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி பயிலும் புலேந்திரராசா அபிஷேக் என்ற மாணவனின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம், இன்றுடன் 2வது நாளாகவும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
தனக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு விடயத்துக்கும் நீதிமன்றங்களை நாடி வழக்கு தாக்கல் செய்கின்றார்கள்.
புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா தவசிகுளத்தில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத் (ஓஹான்)திற்கு இன்று (26.03.2018) ரூபாய் 20,000/- நிதியினூடாக விசேட மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் தரம் 8ல் கல்வி பயிலும் மாணவியான குமஸ்தகரன் சதுர்த்திகா என்ற மாணவிக்கு அவரது கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இன்று (26.03.2019) துவிச்சக்கரவண்டி ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் தியாகராஜா வனிதா என்ற மாணவியின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்காக துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.