சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களை எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகபேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கருத்து தெரிவிக்கையில்,

மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இனங்களுக்கு இடையில் பகையையும், குரோதத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்த அவர், சமூகவளைத்தளங்களில் பறவும் போலி செய்திகளால் மக்கள் அச்சத்துக்குள்ளாகுகின்றனர். எனவே இவ்வாறு பதிவிடும் பழைய மற்றும் போலி செய்திகளை உடன் நிறுத்தவேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.