தும்மலசூரிய பகுதியிலிருந்து இராணுவத்தினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியிலிருந்து பெற்றோல் குண்டுகள் எட்டும், வாள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமானளவு பணத்தை உடன் வைத்திருந்ததாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.