கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று அதிகாலை புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரன்குளி பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றை முந்திச் செல்ல முற்பட்டு கட்டுப்பாட்டை இழந்து பாலமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்து சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நபர்களில் மேலுமொருவர் உயிரிழந்துள்ளார்.
அதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. மேலும், 43பேர் காயமடைந்த நிலையில் புத்தளம் மற்றும் முந்தல் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் காயமடைந்துள்ளதால் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.