எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து ஏற்பட்டுள்ள பல சட்ட சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சிலர் இன்று சட்டமா அதிபரை சந்திக்கவுள்ளனர்.

மத வழிபாட்டு தளங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெறுவது உள்ளிட்ட சட்டவிரோத பிரச்சாரங்கள் தொடர்பில் இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.