இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இலஞ்சமாக பல்வேறு பொருட்களை வழங்கி வருவதாக தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

தேர்தல்கள் ஆணையம் இதனுடன் தொடர்புடைய அறிவித்தல்களை எவ்வளவு தூரம் மேற்கொண்டாலும், அந்த சட்டங்கள் வேட்பாளர்களால் மீறப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.341 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 243 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.