உள்ளூர் அதிகாரசபை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை 342 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 38பேர் இம்முறை உள்ளூர் அதிகாரசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பாக கடந்த 24 மணி நேரத்திற்குள் 26 முறைபாடுகள் கிடைத்துள்ளதுடன் அது தொடர்பாக 16 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, டிசம்பர் 09 ஆம் திகதி முதல் இன்றுவரை 468 தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றுல் 345 தேர்தல் முறைப்பாடுகளும் 123 தேர்தலுக்கான விதிமுறைகளை மீறிய சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.