anurathapuram-jailஅநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தழிழ் அரசியல் கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் 17 பேரும் கடந்த 21ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது வழக்குகளை தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும் அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தபோது போகம்பறை சிறைச்சாலைக்கு நேற்று இடமாற்றம் செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.