Posted by plotenewseditor on 15 September 2016
Posted in செய்திகள்
யாழ். கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையின் ஸ்தாபகர் நினைவு விழாவும் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் 12-09-2016 திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் சி.சிவராஜன் அவர்களின் தலைமையில் வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக எம்.காண்டீபன் ((பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் கல்வி வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக உயர்திரு. சு.சண்முககுலகுமாரன் (உதவிக் கல்விப் பணிப்பாளர், உடுவில் கோட்டம்), பழைய மாணவி திருமதி. நிரஞ்சலா குணராஜ் (கணக்காளர், உணவு, விவசாய ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more