உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றிபெறச் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் எழுக தமிழ் பேரணி தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாளை 24 ஆம் திகதி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாள். இந்தப் பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு எமது உரிமைகளை நிலை நாட்டுவதற்கு குரல் கொடுக்க வேண்டும். Read more